இது லிஸ்ட்லயே இல்லை.. ஆளுநர் டூ அரசியல்வாதி.. தமிழிசை சவுந்தரராஜன் பிளான்: ஆர்.எஸ்.பாரதி
சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசை இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
இதனால் தான் தமிழ்நாட்டில் தன் அரசியல் நிலைப்பாட்டைத் தக்க வைக்க தவறான பேட்டிகளைக் கொடுத்து வருவதாக விமர்சித்துள்ளார்.

"அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கைகுலுக்கத் தெரிந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாரதியாருக்கு மரியாதை செலுத்த நேரமில்லையா" என தமிழிசை சவுந்தரராஜன் கேட்டதற்கு திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி பெயரில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும் சகோதரி, தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக,எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசையை டெல்லி மேலிடத்திற்கு வெளிப்படுத்தும் விதமாக, தவறான பேட்டிகளைக் கொடுத்து, திராவிட முன்னேற்றக் கழக அரசைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் அதனை உறுதிபடுத்தும் வகையில் அறிக்கை விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

தமிழிசை சவுந்தரராஜனை பொறுத்தவரை கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து களம் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் தோல்வியை தழுவினாலும் கூட அவருக்கு ஆளுநர் பதவி வழங்கி கவுரவித்தது கட்சி மேலிடம்.
இந்நிலையில் அவர் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு திரும்புவாரா என்பது கேள்விக்குறிதான். இந்தச் சூழலில் தான் திமுக அமைப்புச் செயலாளர் இப்படியொரு அறிக்கை விடுத்துள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications