பொதுக்கூட்டங்களில் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம்... ஆதரவாளர்களுக்கு சசிகலா அட்வைஸ்..!
சென்னை: பொதுக்கூட்டங்களில் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா அட்வைஸ் செய்திருக்கிறார்.
சென்னை ராமாவரம் தோட்டத்தில் அதிமுக பொன்விழா துவக்கநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழி வந்த தொண்டர்கள் யாரும் பிறர் மனம் புண்படும்படி பேசமாட்டார்கள் என சசிகலா குறிப்பிட்டார்.

சசிகலா மேடையில்
சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் நடந்த அதிமுக பொன்விழா ஆண்டு துவக்க நாள் நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்ற நிலையில், அவரை மேடையில் வைத்துக்கொண்டே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., குறித்து ஒரு சில நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்தனர். அதைத் தொடர்ந்து இறுதியாக மைக் பிடித்துப் பேசிய சசிகலா, எம்.ஜி.ஆர். வழிவந்த தொண்டர்கள் அடுத்தவர்களை புண்படுத்தக் கூடாது என தாம் நினைப்பதாக தெரிவித்தார்.

தரக்குறைவாக
இதனால் இனி யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு அன்புக் கட்டளை பிறப்பித்தார் சசிகலா. எம்.ஜி.ஆர். எப்போதுமே தானும் ஒரு தொண்டன் தான் என அடிக்கடி கூறுவார் என்றும் இதனால் தொண்டர்களால் இன்று நடத்தப்பட்டுள்ள அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

மற்றவர்கள் தவறு
கட்சிக்கு எள் முனை அளவும் துரோகம் செய்ய தாம் நினைத்ததில்லை எனக் கூறிய சசிகலா, மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாமும் செய்யக்கூடாது என ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார். முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் குறித்து சசிகலா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

மதிய உணவு
அதிமுக பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக சசிகலாவுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது. அரசியல் நிகழ்வு ஒன்றில் சசிகலாவுக்கு வீரவாள் பரிசளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனிடையே ராமாவரம் தோடத்தில் உள்ள எம்.ஜி.ஆர். பள்ளி மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட சசிகலா, சிறிது நேரம் உணவும் பரிமாறினார். இதற்கான ஏற்பாடுகளை சசிகலாவின் தீவிர ஆதரவாளரான வைத்தியநாதன் செய்திருந்தார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications