ஸ்டாலினுக்கு எதிரான கேஸ்! 2 மாசமா செய்யாததை 1 நாளில் செய்வீர்களா? துரைசாமிக்கு உச்ச நீதிமன்றம் செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2011-ஆம் ஆண்டு கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதித் தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பின் குளறுபடிகளையும் காலதாமதத்தையும் கண்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதில் சைதை துரைசாமியிடம் கடுமையான கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பி உள்ளது.

நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:

mkstalin election case

நீதிபதிகளின் சரமாரி கேள்விகள்

விசாரணையின் தொடக்கத்தில், சைதை துரைசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், அதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர்.

முரணான ஆதாரங்கள்: "நீங்கள் தாக்கல் செய்துள்ள ஆதாரங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இதில் எந்தத் தெளிவும் இல்லை" என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கால அவகாசத்திற்கு மறுப்பு: கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞர் கோரினார். இதைக் கேட்டு ஆவேசமடைந்த நீதிபதிகள், "கடந்த 2 மாதங்களாகச் செய்யாத வேலையை ஒரே நாளில் முடித்துவிடுவீர்களா?" என்று கேள்வி எழுப்பினர்.

வழக்கின் பின்னணி

2011 தேர்தலில் அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின், 'திருமங்கலம் பார்முலா'வைப் பயன்படுத்தி வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கியதாக சைதை துரைசாமி குற்றம் சாட்டினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடங்கிய சிடிக்கள் (CDs) ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்திய சாட்சியச் சட்டம், 1872-ன் படி, ஒரு கணினி, மொபைல் அல்லது கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை (வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள், சிடிக்கள்) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது, அவற்றுடன் ஒரு உறுதிமொழிச் சான்றிதழ் (Certificate) இணைக்கப்பட வேண்டும். இதுவே 65B சான்றிதழ் எனப்படுகிறது.

அந்த டிஜிட்டல் ஆதாரம் போலியானது அல்ல (No Tampering) என்பதையும், அது எடுக்கப்பட்ட சாதனம் (Device) சரியாக வேலை செய்தது என்பதையும் உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம்.

இருப்பினும், மேற்கண்ட ஆதாரங்கள் 'இந்திய சாட்சியச் சட்டத்தின் 65B' பிரிவின் கீழ் முறையாகச் சான்றளிக்கப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் 2017-ல் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்தே தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சைதை துரைசாமி சமர்ப்பித்த சிடிக்களில் இந்த 65B சான்றிதழ் இல்லாததால்தான் சென்னை உயர் நீதிமன்றம் அவற்றை ஆதாரமாக ஏற்க மறுத்தது. இப்போது உச்ச நீதிமன்றம், இந்தத் தொழில்நுட்பக் காரணத்தைத் தாண்டி அந்த வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராயலாமா என்று உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.

இறுதி விசாரணை தேதி அறிவிப்பு

இந்த வழக்கை இனிமேலும் இழுத்தடிக்க விரும்பாத நீதிபதிகள், வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த வாரம் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளனர். அன்றைய தினமே இந்த நீண்ட காலத் தேர்தல் வழக்கில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+