நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலாத்கார சம்பவங்களுக்கு என்கவுண்ட்டர் போன்ற மரண தண்டனைதான்: சீமான்
சென்னை: நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தாலும் பலாத்கார சம்பவங்களுக்கு தெலுங்கானா என்கவுண்ட்டர் போன்ற மரணதண்டனைதான் விதிக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு இன்று சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:
தெலுங்கானா என்கவுண்ட்டரை நான் வரவேற்கிறேன். மரணம் என்பது எந்த ஒரு குற்றத்துக்கும் தண்டனையாக இருக்கக் கூடாது என்று போராடுகிற பிள்ளைகள் நாங்கள்.

வன்புணர்வுக்கு தண்டனை
ஆனால் பெண்களை போகப் பொருளாக, போதைப் பொருளாக, நுகர் பொருளாக கருதி வன்புணர்வு செய்யும் செயலுக்கு மரணத்தைத் தவிர வேறு எதுவும் தண்டனையாக இருக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அவ்வளவு பெரிய குற்றம் செய்தவர்கள் மீதான குண்டர் சட்டம் 90 நாட்களில் ரத்து செய்யப்பட்டது கொடுமையானது. அது வரலாற்று பெரும் பிழை.

என்கவுண்ட்டரே தீர்வு
எந்த இடத்தில் பாலியல் வன்புணர்வு செய்தார்களோ அதே இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் 4 பேரை சுட்டால்தான் மக்களிடம் அச்சம் பரவும். மரணம் ஒன்றுதான் இவர்களை ஒழுங்காக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி கொண்டே இருக்கும்.

தெலுங்கானா என்கவுண்ட்டருக்கு வரவேற்பு
இல்லை எனில் 90 நாளில் வெளியே வந்துவிடலாம்... எந்த குற்றமும் செய்யலாம்..என்கிற சிந்தனை வந்துவிடும். தெலுங்கானாவில் நடந்த செயலை நாங்கள் முழு மனதார வரவேற்கிறோம்.

நாங்க ஆட்சிக்கு வந்தாலும்..
நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதே தண்டனைதான். 6 வயது குழந்தையை ஒருவன் வன்புனர்வு செய்கிறான் எனில் அவனை தண்டிக்க வேண்டும். அவனை சிறையில் அடைத்து வைக்கக் கூடாது. தெலுங்கானாவில் நடந்ததை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நிர்மலா சீதாராமனுக்குப் பதில்
வெங்காயம், வெள்ளைப்பூண்டை சாப்பிடுவது இல்லை என்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். மாட்டுக்கறி கூட நீங்கள் சாப்பிடுவது இல்லை.. அப்படியானால் நாங்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதும் உங்களை பாதிக்காதுதானே..ஒரு பொறுப்புள்ள அமைச்சர் சொல்லும் பதிலா இது? இவ்வாறு சீமான் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications