வேகமெடுக்குது கொரோனா “பூஸ்டர் டோஸ் போடுங்க” கட்டாயம் போடவேண்டியது இவ்வளவு பேரா? அரசு அறிவுறுத்தல்!
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், 17.96 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு ஒரே நாளில் 1,359-ஆக அதிகரித்தது. தமிழகத்தில் 355 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ள நிலையில், தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மீண்டும் அதிகரிப்பு
கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டன. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கட்டுப்படுத்த
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், கொரோனா தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டோர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், "தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அப்படியென்றால், மக்களிடையே நோய் எதிர்ப்பு திறன் குறைந்துள்ளது என அர்த்தம். அதனால், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்துகிறோம். 2 தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் நிறைவடைந்த, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

பூஸ்டர் டோஸ்
குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் பூஸ்டர் தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 30.27 லட்சம் பேரில் 12.31 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். 17.96 லட்சம் பேர் இன்னும் பூஸ்டர் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை. அவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

எந்த வகை கொரோனாவாக இருந்தாலும்
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால், ஒமைக்ரானின் பிஏ-5 வகை உள்ளிட்ட எந்த வகையான கொரோனா வைரஸ் வந்தாலும், தீவிர உடல்நலப் பாதிப்பு மற்றும் உயிரிழப்பைத் தடுக்க முடியும். எனவே, சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications