சென்னையில் மூடி மூடி திறக்கும் வானம்... ஆனாலும் புழுக்கம் குறைந்தபாடில்லை
சென்னை: சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் புழுக்கம் குறையாமல் இருப்பதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக வெயில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கூடவே அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் பெரும் தவிப்படைந்துள்ளனர்.
பருவமழை பொய்த்து போனதால் வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொளுத்த வேண்டிய வெயில் ஜனவரி மாதம் முதலே கொளுத்த தொடங்கி விட்டது. இதனால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்து விட்டது.

ஃபனி புயல்
இதனால் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு புறநகர் பகுதிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அண்மையில் வங்கக்கடலில் உருவான ஃபனி புயல் தமிழகத்தை தாக்கும் என கூறப்பட்ட நிலையில் அந்த புயல் ஒடிசாவை தாக்கியது.

புழுக்கம்
இதனால் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது.

குறையாத புழுக்கம்
ஒடிசாவை தாக்கிய ஃபனி புயல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சியதே இந்த புழுக்கத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மூடி மூடித் திறக்கிறது. இருப்பினும் புழுக்கம் குறைந்தபாடில்லை.

மழைக்கு வாய்ப்பு
இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைத்தாலும் வானிலை மையத்தின் இந்த தகவல் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications