ஆறாக ஓடும் பணமழை... வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம், போலீஸ்... டிடிவி தினகரன் ஆவேசம்
சென்னை: ‛‛நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் பணமழை ஆறாக ஓடும் நிலையில் தேர்தல் ஆணையம், போலீஸ் துறை வேடிக்கை பார்க்கிறது'' என டிடிவி தினகரன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடைபெற உள்ளது. சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 90 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12838 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சூறாவளி பிரச்சாரம்
இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை துவக்கினர். சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

நாளை ஓட்டுப்பதிவு
தேர்தல் நடத்தை விதிகளின்படி 48 மணி நேரத்துக்கு முன்னதாக நேற்று மாலையுடன் பகிரங்க பிரசாரம் முடிவடைந்தது. நாளை காலை 7 மணிக்கு மாநிலம் முழுவதும் ஒரேகட்டமாக 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 1.13 லட்சம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

டிடிவி அதிருப்தி
இந்நிலையில் ஓட்டுக்காக சில இடங்களில் பொதுமக்களுக்கு பணம் விநியோகிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிருப்தி அடைந்துள்ளார். பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம், போலீசார் தடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

ஆறாக ஓடும் பணம்
இதுதொடர்பா டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் ஓய்ந்தவுடன் நேற்று மாலையிலிருந்து தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் திமுக, பழனிசாமி கம்பெனிகள் பணத்தை வாரி இறைப்பதை மாநில தேர்தல் ஆணையமும், காவல் துறையும் பார்த்து கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது'' என குறிப்பிட்டுள்ளார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications