“இந்த பிரியாணி ஹோட்டலிலா இப்படி?” - 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் - உணவுப் பிரியர்கள் ஷாக்!
சென்னை : சென்னையில் உள்ள பிரபலமான பிரியாணி ஹோட்டல்களில் ஒன்று யா மொகைதீன் பிரியாணி. இந்த ஹோட்டலில் உணவுப் பிரியர்கள் பிரியாணி சாப்பிடக் குவிவது வழக்கம்.
சமீப காலமாக இந்த ஹோட்டலில் இறைச்சி பழையது போல இருக்கிறது என உணவுப் பிரியர்கள் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், அந்த ஹோட்டலில் இருந்த கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றி அழித்தனர். இச்சம்பவம் அந்த ஹோட்டல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ரெய்டு
சென்னை வடபழனியில் செயல்படும் பிரபலமான உணவகமான யா மொகைதீன் பிரியாணி ஹோட்டலில், உணவின் தரம் குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் அங்கு திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கெட்டுப்போன இறைச்சி
உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் இந்தச் சோதனையில் 50 கிலோ அளவில் சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அழுகிய, கெட்டுப்போன கோழி, ஆட்டு இறைச்சி அகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்த கெட்டுப்போன இறைச்சி மீது பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டு அவை அழிக்கப்பட்டன.

அபராதம்
மேலும் கெட்டுப்போன இறைச்சிகளை சமையலுக்குப் பயன்படுத்திய அந்த ஹோட்டலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், மீண்டும் கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்தினால் கடை நிரந்தரமாக மூடப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், கெட்டுப்போன இறைச்சி சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த இறைச்சியை கைப்பற்றி அழித்துவிட்டோம். அதன் மாதிரிகள் பகுப்பாய்வு கூடத்துக்கு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது தவறான போக்கு. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

உடனே புகார் சொல்லுங்க
பொதுமக்களும் உணவு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். உணவின் தரம் குறித்து சந்தேகம் எழுந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குளிர்சாதனம் உள்ளிட்ட உபகரணங்களை சரி செய்து, முறையான இறைச்சிகளை சமையலுக்கு பயன்படுத்துகிறோம் என்று ஹோட்டல் நிர்வாகம் உறுதிமொழி தரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications