“இந்த பிரியாணி ஹோட்டலிலா இப்படி?” - 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் - உணவுப் பிரியர்கள் ஷாக்!
சென்னை : சென்னையில் உள்ள பிரபலமான பிரியாணி ஹோட்டல்களில் ஒன்று யா மொகைதீன் பிரியாணி. இந்த ஹோட்டலில் உணவுப் பிரியர்கள் பிரியாணி சாப்பிடக் குவிவது வழக்கம்.
சமீப காலமாக இந்த ஹோட்டலில் இறைச்சி பழையது போல இருக்கிறது என உணவுப் பிரியர்கள் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், அந்த ஹோட்டலில் இருந்த கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றி அழித்தனர். இச்சம்பவம் அந்த ஹோட்டல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ரெய்டு
சென்னை வடபழனியில் செயல்படும் பிரபலமான உணவகமான யா மொகைதீன் பிரியாணி ஹோட்டலில், உணவின் தரம் குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் அங்கு திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கெட்டுப்போன இறைச்சி
உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் இந்தச் சோதனையில் 50 கிலோ அளவில் சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அழுகிய, கெட்டுப்போன கோழி, ஆட்டு இறைச்சி அகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்த கெட்டுப்போன இறைச்சி மீது பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டு அவை அழிக்கப்பட்டன.

அபராதம்
மேலும் கெட்டுப்போன இறைச்சிகளை சமையலுக்குப் பயன்படுத்திய அந்த ஹோட்டலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், மீண்டும் கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்தினால் கடை நிரந்தரமாக மூடப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், கெட்டுப்போன இறைச்சி சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த இறைச்சியை கைப்பற்றி அழித்துவிட்டோம். அதன் மாதிரிகள் பகுப்பாய்வு கூடத்துக்கு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது தவறான போக்கு. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

உடனே புகார் சொல்லுங்க
பொதுமக்களும் உணவு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். உணவின் தரம் குறித்து சந்தேகம் எழுந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குளிர்சாதனம் உள்ளிட்ட உபகரணங்களை சரி செய்து, முறையான இறைச்சிகளை சமையலுக்கு பயன்படுத்துகிறோம் என்று ஹோட்டல் நிர்வாகம் உறுதிமொழி தரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications