தமிழக பிராமணர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.. "ஆட்சியே இருக்காது.." சு.சாமி ஆவேசம்.. ஆளுநருக்கு கடிதம்
சென்னை: தமிழகத்தில் பிராமணர்கள் குறி வைக்கப்படுகிறார்கள், யூதர்களை நாஜி படை தாக்கியதை தமிழக சூழல் நினைவுபடுத்துகிறது எனவே,
தமிழக நிலவரம் பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரிலுள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாக வந்து நின்றது போன்ற சம்பவங்கள் தற்போது வெளியே வந்தன.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

ஜாதி பிரச்சினை
இந்த நிலையில்தான், பள்ளி மீதான விசாரணை மற்றும் விமர்சனங்களுக்கு ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
பிராமணர்கள் நிர்வாகத்திலுள்ள பள்ளி என்பதால் குறி வைக்கப்படுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இந்த நிலையில்தான் சு.சாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

சு.சாமி ட்வீட்
சு.சாமி தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், தமிழகத்திலுள்ள ஞானி மற்றும் தியாகிகளான பிராமணர்கள் மத்தியில், எழுந்துள்ள அச்ச உணர்வு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். நாஜி படைகள் ஜெர்மனியில் யூதர்களை குறி வைத்து, தாக்குதல் நடத்திய ஆரம்ப கால கட்டத்தை இந்த சம்பவம் நினைவுபடுத்துகிறது. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video

தமிழகத்தில் ஆட்சி இருக்காது
"இந்த நிலையில், இன்னொரு நபர் டுவிட்டரில், பள்ளி விவகாரத்தில் நியாயமான "விசாரணை" இல்லையேல் தமிழகத்தில் ஆட்சி இருக்காது..!! -டாக்டர்.சுப்ரமணிய சுவாமி" என்று ட்வீட் போட அதை சு.சாமி ரீடிவிட் செய்துள்ளார். அதாவது, தமிழகத்தில் ஆட்சி இருக்காது என சு.சாமி சொல்வதாக இதை எடுத்துக் கொள்ளலாம். பாலியல் விவகாரத்தில் விசாரணை நடைபெறுவதை எதிர்த்துதான் சு.சாமி ஆவேசமாகியுள்ளார் என்பதை இந்த ரீட்வீட் உறுதி செய்துள்ளது.

பத்மா சேஷாத்ரி பள்ளி
முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சில நாட்கள் முன்பு வெளியிட்ட அறிக்கையில், அரசியல் ஆதாயத்திற்காக, ஜாதி பிரச்சினையாக மாற்றுகிறார்கள் என்று பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். இப்போது சு.சாமி போன்றோர் இந்த விஷயத்தில் ஜாதியை முன்வைத்து காய் நகர்த்த ஆரம்பித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
-
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications