இது என்ன புதுசா இருக்கு..! இந்தி பேசுறவங்க நல்லவங்க..அதனால் இந்தி கத்துக்கனும்.! சொல்கிறார் சுஹாசினி

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்தி ஒரு நல்ல மொழி அதை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அதனால் அவர்களுடன் பேசவேண்டும் என்பதற்காகவாவது இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டும் என நடிகையும் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியுமான சுஹாசினி கூறியுள்ளார்.

Recommended Video

    Suhasini Speech | இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அதனால் கற்றுக்கொள்ளலாம்

    அலுவல் மொழியாக இந்தி மொழியை அறிவிக்க வேண்டும் என அமித்ஷா எந்த நேரத்தில் கூறினாரோ தெரியாது, அவர் சொல்லியது மறைந்தாலும் அதற்குப் பிறகான இந்தி மொழி குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கல்வி, சினிமா, அரசியல் என அனைத்து துறைகளிலும் இந்தி மொழியை புகுத்த மத்திய அரசு முயல்வதாக கூறி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கல்வி நிறுவனங்களும் குறிப்பாக சினிமா பிரபலங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்தி சர்ச்சை

    இந்தி சர்ச்சை

    உச்சபட்ச மோதலாக அஜய் தேவ்கன் - கிச்சா சுதீப் மோதலைச் சொல்லலாம். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப் ஆகியோர் ட்விட்டரில் இந்தி தேசிய மொழியா என்பது குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். இந்தி மொழி பிரச்சினை அரசியல் என்பதை தாண்டி சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பதாக பலரும் புகார் கூறி வரும் நிலையில், தற்போது பலரும் இது குறித்து பேசி வருகின்றனர்.

    தமிழுக்கு ஆதரவு

    தமிழுக்கு ஆதரவு

    ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தமிழுக்கு ஆதரவாக இந்தி பாடகர் சோனு நிகம் பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அஜய் தேவ்கனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், தமிழகர்கள் ஏன் இந்தி பேச வேண்டும், இந்தி தேசிய மொழி என்று அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது என அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்டார்.

    சுகாசினி பேச்சு

    சுகாசினி பேச்சு

    இந்நிலையில் தான் நடிகையும் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியுமான சுஹாசினி, "இந்தி ஒரு நல்ல மொழி அதை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அதனால் அவர்களுடன் பேசவேண்டும் என்பதற்காகவாவது இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டும் என கூறியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," எல்லா மொழிகளையும் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

    மொழிகளை மதிக்க வேண்டும்

    மொழிகளை மதிக்க வேண்டும்

    எல்லா மொழிகளையும் மதித்தே ஆகவேண்டும். எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் காலையில் சமைக்கும் பெண் தெலுங்கு பேசுகிறார்கள். இரவில் சமைப்பவர் ஹிந்தி பேசுகிறார். எனக்கு இந்த மொழிதான் பிடிக்குமென்றால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது. எல்லோரும் எல்லா மொழியும் தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும். இந்தி ஒரு நல்ல மொழி அதை கற்றுக் கொள்ள வேண்டும்.

    இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்

    இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்

    இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அதனால் அவர்களுடன் பேசவேண்டும் என்பதற்காக அதாவது இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்களும் நல்லவர்கள் அவர்களுடன் பேச தமிழ் கற்றுக் கொண்டால் சந்தோஷப்படுவார்கள். எனக்கு எத்தனை மொழிகள் தெரியும் அவ்வளவு சந்தோஷம். பிரெஞ்சு மொழி கூட எனக்கு ரொம்ப பிடிக்கும். அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை. அதற்காக நான் தமிழ் இல்லை என்று ஆகிவிடுமா.?" என சுகாசினி கூறியுள்ளார்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+