சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்த்த கோடை மழை - சட்டென்று மாறிய வானிலையால் பரவிய குளுமை
தமிழகத்தில் மாலை வரை சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக பல ஊர்களில் கனமழை கொட்டித்தீர்த்தனது. வெம்மை தணிந்து குளுமை பரவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி அனைவரையும் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெப்பம் சலனம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கொட்டிய கனமழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
அனல்காற்று வீசும் போது சட்டென்று வானிலை மாறி குளுமையான காற்றுடன் மழை பெய்தால் எப்படி இருக்கும். கோடை காலத்தில் வருணபகவானின் கருணையால் சில நேரங்களில் அப்படி மழை பெய்யும். கூடவே இடியும் மின்னலுமாக பலத்த காற்றும் வீசும்.

காலை முதலே தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவானது. அனல்காற்று வீசியதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர் மாலை நேரத்தில் திடீரென குளுமையான காற்று வீசியது.
கிருஷ்ணகிரி, நாமக்கல், பரமத்தி வேலூர் பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றுடன் இடியும் மின்னலுமாய் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.
சொன்ன மாதிரியே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த மழை வருகிறது pic.twitter.com/tsA0mQiFbE
— karu.prabhakaran (@karuprabhakaran) April 5, 2021
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை கொட்டித்தீர்த்தது.
நல்லவரின் நல்லாட்சி தொடர..வருணபகவான் ஆசி...ஈரோட்டில்..கோடை மழை..💐💐💐💐💐 pic.twitter.com/A46M80tZlP
— Maha Simha (@maha_simha) April 5, 2021
நீலகிரி, கூடலூர் மற்றும் அதன்சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்தது. கோவை, தடாகம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுமார் 2 மணி நேரம் மழை பலத்த மழை கொட்டியதால் வெள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டியது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். கரூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
சிவகங்கையில் ஒரு மணி நேரம் மழை பெய்தது. மானாமதுரையில் பலத்தகாற்றுடன் மழை பெய்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சில பகுதிகளில் அரை மணி நேரம் பெய்தது. தேனி,கம்பம் சுற்றுவட்டாரபகுதிகளில் அரை மணி நேரம் மழை பெய்தது. தென்காசி, செங்கோட்டையில் அரை மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சியின் காரணமாக இன்று வட தமிழகம் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. 8ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும் 9ஆம் தேதி தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கணித்தது போல இன்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பல இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications