விரைவில் வரும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்? முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவாதம்
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் இயற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மார்ச் 5ல் அமைச்சரவை கூட்டம் நடந்த நிலையில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

விவாதித்தது என்ன?
இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பதுக்கு உண்டான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவது, சென்னையில் 2வது விமான நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல் அமைச்சர் ஸ்டாலின் விவாதித்தார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றியும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர தமிழக நலன் சார்ந்த அரசின் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்
குறிப்பாக இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டை தடை செய்ய சட்டம் இயற்றுவது பற்றி விரிவாக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நீதிபதியின் குழு
முன்னதாக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் இந்த விஷயத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. பாமக உள்ளிட்ட பல கட்சிகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சிறப்பு சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

பத்திரிகையாளர்களை சந்திக்க வாய்ப்பு
இந்த குழு முதல்வர் முக ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் தான் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான முக்கிய முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் தங்கம் தென்னரசு பத்திரிகையாளர்களை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications