சிங்கங்களை சாய்த்த கொரோனா.. நேரடியாக களமிறங்கிய முதல்வர்.. வண்டலூர் உயிரியல் பூங்காவில் திடீர் ஆய்வு
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வண்டலூர் உயிரியல் பூங்காவில் திடீரெனெ ஆய்வு மேற்கொண்டார்.
Recommended Video
மனிதர்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாடாய்படுத்திய கொரோனா வைரஸ் இப்போது விலங்குகளையும் தாக்க தொடங்கி விட்டது.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கபட்டு வந்த 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கபட்டு அதில் ஒரு சிங்கம் பலியாதனாத பூங்கா நிர்வாகம் அதிர்ச்சி தகவல் தெரிவித்தது.

11 சிங்கங்களுக்கு கொரோனா
11 சிங்கங்கள் கடந்த சில நாட்களாக சரியாக உணவு உட்கொள்ளாமல் தொடர் இருமல் போன்றவற்றால் அவதிபட்டுள்ளன. இதனால் பூங்காவில் இருந்த 11 சிங்கங்களின் மூக்கு மற்றும் ஆசன வாய் மாதிரிகளை மத்தியபிரதேசத்தில் உள்ள ஆய்வகத்திற்கும், இரத்த மாதிரிகளை தமிழ்நாடு கால்நடை பல்கலை கழகத்திற்கும் அனுப்பினர்.

ஒரு சிங்கம் உயிரிழப்பு
இதனிடையே மூன்றாம் தேதி நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் மூக்கில் திரவம் சுரந்து பலியானது. பின்னர் ஆய்வு முடிவுகளில் 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியபட்டது. அதன் பின்னர் அரசு கால்நடை மருத்துவ குழுவினர் சிங்கங்களை பரிசோதித்தனர். இது தவிர அங்குள்ள சிறுத்தை, புலி உள்ளிட்ட அணைத்து விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாத்திரை வழங்கப்பட்டன
விலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. தொற்று ஏற்பட்ட சிங்கங்களை தனி அறையில் வைக்கவும் அதனை சிசிடிவி கேமரா காட்சி மூலமாக பராமரிக்கும் பணியில் தீவிரமாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் திடீரெனெ ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
பேட்டரி காரில் சென்று சிங்கங்கள் பராமரிக்கப்படும் இடங்கள், மற்ற விலங்குகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன? என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட சிங்கங்களையும் முதல்வர் பார்வையிட்டார். கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் பிற உயிரினங்களை தனிமைப்படுத்துதல் குறித்த பணிகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications