திடீரென இடிந்து விழுந்த திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய கட்டிடம்.. 24 வீடுகள் தரைமட்டம்.. பதற்றம்
சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு திடீரென்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை: திருவொற்றியூர் அரிவாங்குளத்தில் உள்ள குடிசைமாற்றுவாரியக் குடியிருப்புக் கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிடத்திற்குள் மக்கள் யாரும் சிக்கியுள்ளனரா என்று தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
Recommended Video
திருவொற்றியூரில் உள்ள அரிவாங்குளத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசைமாற்றுவாரியக் குடியிருப்பில் டி பிளாக்கில் நேற்றிரவு முதலே விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை விரிசல் அதிகரிக்கவே அச்சமடைந்த குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
குடியிருப்பில் இருந்த 24 குடும்பத்தினரும் வெளியேறிய நிலையில் காலையில் மொத்த கட்டிடமும் சடசடவென இடிந்து விழுந்து தரைமட்டமானது. வீடுகள் அனைத்தும் இடிந்து மண்மேடாக காட்சியளிக்கிறது.

5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கியுள்ளார்களா என தீயணைப்புப்படை வீரர்கள் தேடி வருகின்றனர்.
கட்டிடத்தில் இருந்த குடும்பத்தினர் முன்கூடியே வெளியேறியதால் அனைவரும் உயிரோடு தப்பியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நீர் நிலைகளில் கட்டிடம் கட்டியதால் மட்டுமே விபத்து ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.

23ஆண்டுகளுக்குள் கட்டிடம் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சென்னையில் தொட்டாலே உதிரும் சிமெண்ட் பூச்சுடன் கட்டிடம் கட்டப்பட்டிருந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
டி பிளாக் மட்டுமே இப்போது இடிந்து விழுந்தாலும் சி பிளாக்கில் வசிப்பவர்களும் மற்ற குடியிருப்புகளும் உடைந்து வழும் வகையில்தான் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
-
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
விஜயின் தவெகவிற்கு ‘செக்'.. சென்னையின் 16 தொகுதிகளில் வெல்ல சபரீசன் வியூகம்.. ரெடியான 5 லட்சம் பேர் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா












Click it and Unblock the Notifications