தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊதியம் இரட்டிப்பாக உயர்வு: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
சென்னை: ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மாத ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட சபையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாதாந்திர மதிப்பு ஊதியம் இப்போதுள்ள 1000 ரூபாயிலிருந்து 2000மாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல்கள்
தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டசபையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது.

விரைவில் தேர்தல்
இந்த கொள்கை விளக்க குறிப்பில், புதிதாக ஏற்படுத்தப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையை செய்ய வேண்டிய காரணத்தினால் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்றும், தற்போது இவற்றிற்கு தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல்
மாவட்ட பிரிப்புகளுக்கு உள்ளான மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கொள்கை விளக்க குறிப்பில் தேர்தல் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 மாவட்டங்களில் தேர்தல்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் 27 மாவட்டங்களில் 2019-20ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் நடந்தது என்றும் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications