சவுதியில் கோமா நிலையில் தவித்த தமிழர்.. உதவி செய்து அனுப்பி வைத்த ரியாத் தமிழ்ச் சங்கம்
சென்னை: சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உணர்வில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த முக்கூரான் முருகவேலை இந்திய தூதரக உதவியுடன் ரியாத் தமிழ் சங்கத்தினர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணி நிமித்தமாக தங்கி இருக்கின்றனர்.
குறிப்பாக தமிழர்கள், மலையாளிகள், வங்காளிகள் பலர் உயர்மட்ட பணி தொடங்கி ஓட்டுநர், கட்டிடப் பணி போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

உணர்விழந்த தமிழர்
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் முக்கூரான் முருகவேல்(49). இவர் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் பணிபுரிந்து வந்து உள்ளார். கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கினார் முருகவேல். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகவேல், கோமா நிலைக்கு சென்றார்.

குடும்பத்தின் வறுமை நிலை
முக்கூரான் முருகவேல் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற தகவலும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகவே நாடு கடந்து உறவினர்களை பிரிந்து முக்கூரான் முருகவேல் சவுதி அரேபியா சென்றார். அவரை கோமா நிலையில் இந்தியாவுக்கு வரவழைத்து சிகிச்சையளிக்க அதிக செலவாகும் என்று அஞ்சிய குடும்பத்தினர் குணமானதும் அனுப்பி வையுங்கள் என்று கூறி இருக்கின்றனர்.

மதம் கடந்து தோள் கொடுத்த தமிழர்கள்
குடும்பத்தினரின் நிலையை புரிந்துகொண்ட ரியாத் தமிழ் சங்கத்தின் நிர்வாகி ஜமால்சேட் குழுவினருடன் இணைந்து முயற்சி எடுத்து சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல் அஸீஸ் மருத்துவ வளாகத்தில் முக்கூரான் முருகவேலை அனுமதித்தார். பின்னர் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று அவரை சென்னை அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நிதியுதவி செய்த ரியாத் வாழ் சங்கத்தினர்
இதுகுறித்து இந்திய தூதரகத்தின் உதவியை நாடிய ரியாத் தமிழ் சங்க நிர்வாகிகள், சொந்தமாக பணம் செலவழித்து மருத்துவக் குழுவினருடன் சென்னைக்கு விமானத்தில் முக்கூரான் முருகவேலை அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்ற முக்கூரான் முருகவேல், மதுரை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

ரியாத் தமிழ் சங்கம்
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் பணிபுரியும் தமிழர்களுக்கு உதவுவதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது ரியாத் தமிழ் சங்கம். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பரப்புவது, தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத தமிழர்களுக்கு மொழியை பயிற்றுவிப்பது, இங்கு வேலை தேடி வரும் தமிழர்களுக்கு பணி வாங்கிக் கொடுப்பது, பணியிடத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் உதவுவது, விசா போன்றவற்றில் சிக்கல் ஏற்பட்டால் சட்ட உதவிகளை செய்வது, உயிரிழந்த தமிழர் உடல்களை தாயகம் அனுப்பி வைப்பது போன்ற பணிகளை இந்த சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications