ஏன் இப்படி போராட்டம் பண்றீங்க?.. அப்பறம் எப்படி சிரமங்களை சரி செய்ய முடியும்.. தமிழிசை சலிப்பு
வங்கி ஊழியர்கள் போராட்டத்துக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "ஏன் இப்படி போராட்டம் பண்றீங்க? வங்கி இணைப்புக்கு போராட்டம் பண்ணினால் அப்பறம் எப்படி பொருளாதார சிரமங்களை சரி செய்ய முடியும்" என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு " அக்கா!! உங்களையும் ஏமாத்திட்டாரா மோடி" என்று ட்விட்டர்வாசிகள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு இனி 4 வங்கிகளாக இயங்கும் என்று நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இப்படி வங்கிகள் இணைக்கப்படுவதால் கடன் கொடுக்கும் அளவு அதிகரிக்கும், வங்கி ஊழியர்கள் சங்கம் நெட்வொர்க் அதிகரிக்கும், வங்கி, வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள் என எல்லாருக்குமே நல்லதுதான் அமையும் என்று பல காரணங்களை சொன்னதுடன், இதன்மூலம் ஊழியர்களக்கு வேலை வாய்ப்பு இழப்பும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தையும் தந்தார்.

வங்கி சேவை
ஆனாலும், வங்கி இணைப்புக்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், எங்களுக்கு இப்படி இணைப்பே தேவையில்லை, லட்சக்கணக்கான கிராம மக்களுக்கு வங்கி வசதிகள் சேவை இல்லாத நிலையில், இப்படி ஒரு அறிவிப்பு தேவைதானா என்றும், உடனடியாக அதை வாபஸ் பெற வேண்டும் என்று போராட்டத்தை அறிவித்துள்ளன.

அறிவிப்பு
இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு தமிழிசை சவுந்தராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுவாக, மத்திய பாஜக அரசு எந்த திட்டத்தையும், அறிவிப்பினையும் செய்தால், அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரவேற்பதுதான் மாநில பாஜகவின் இன்றியமையாத கடமையாக உள்ளது.

இந்தி திணிப்பு
நீட், இந்தி திணிப்பு உட்பட மக்களை பாதிக்கும் எதுவானாலும், அதற்கு தங்கள் தரப்பு கருத்தினையோ, எதிர்மறை விமர்சனத்தையோ கட்சி சார்பாக யாருமே முன்வைப்பது இல்லை. அந்த வகையில், வங்கி இணைப்புக்கும் தமிழிசை சவுந்தராஜன் வரவேற்புதான் தந்துள்ளார்.
|
சிரமங்கள்
இது சம்பந்தமாக அவர் பதிவிட்ட ட்வீட்டில், "வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று மாண்புமிகு நிதியமைச்சர் @nsitharaman அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்டஅறிவிப்பு ஏன்? போராட்டம்? போராட்டம்? என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்? வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்? பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
|
ஏமாற்றம்
இதற்கு வழக்கமாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை வரவேற்றும், எதிர்த்தும் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் கேட்டுள்ளார், "என்னாது பொருளாதார சிரமமா???? நாடு முன்னேற்றப்பாதையில் செல்கிறது. பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்றெல்லாம் சொன்னீங்களே அக்கா!! உங்களையும் ஏமாத்திட்டாரா மோடி" என்று பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications