ஏன் இப்படி போராட்டம் பண்றீங்க?.. அப்பறம் எப்படி சிரமங்களை சரி செய்ய முடியும்.. தமிழிசை சலிப்பு
வங்கி ஊழியர்கள் போராட்டத்துக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "ஏன் இப்படி போராட்டம் பண்றீங்க? வங்கி இணைப்புக்கு போராட்டம் பண்ணினால் அப்பறம் எப்படி பொருளாதார சிரமங்களை சரி செய்ய முடியும்" என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு " அக்கா!! உங்களையும் ஏமாத்திட்டாரா மோடி" என்று ட்விட்டர்வாசிகள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு இனி 4 வங்கிகளாக இயங்கும் என்று நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இப்படி வங்கிகள் இணைக்கப்படுவதால் கடன் கொடுக்கும் அளவு அதிகரிக்கும், வங்கி ஊழியர்கள் சங்கம் நெட்வொர்க் அதிகரிக்கும், வங்கி, வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள் என எல்லாருக்குமே நல்லதுதான் அமையும் என்று பல காரணங்களை சொன்னதுடன், இதன்மூலம் ஊழியர்களக்கு வேலை வாய்ப்பு இழப்பும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தையும் தந்தார்.

வங்கி சேவை
ஆனாலும், வங்கி இணைப்புக்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், எங்களுக்கு இப்படி இணைப்பே தேவையில்லை, லட்சக்கணக்கான கிராம மக்களுக்கு வங்கி வசதிகள் சேவை இல்லாத நிலையில், இப்படி ஒரு அறிவிப்பு தேவைதானா என்றும், உடனடியாக அதை வாபஸ் பெற வேண்டும் என்று போராட்டத்தை அறிவித்துள்ளன.

அறிவிப்பு
இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு தமிழிசை சவுந்தராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுவாக, மத்திய பாஜக அரசு எந்த திட்டத்தையும், அறிவிப்பினையும் செய்தால், அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரவேற்பதுதான் மாநில பாஜகவின் இன்றியமையாத கடமையாக உள்ளது.

இந்தி திணிப்பு
நீட், இந்தி திணிப்பு உட்பட மக்களை பாதிக்கும் எதுவானாலும், அதற்கு தங்கள் தரப்பு கருத்தினையோ, எதிர்மறை விமர்சனத்தையோ கட்சி சார்பாக யாருமே முன்வைப்பது இல்லை. அந்த வகையில், வங்கி இணைப்புக்கும் தமிழிசை சவுந்தராஜன் வரவேற்புதான் தந்துள்ளார்.
|
சிரமங்கள்
இது சம்பந்தமாக அவர் பதிவிட்ட ட்வீட்டில், "வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று மாண்புமிகு நிதியமைச்சர் @nsitharaman அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்டஅறிவிப்பு ஏன்? போராட்டம்? போராட்டம்? என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்? வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்? பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
|
ஏமாற்றம்
இதற்கு வழக்கமாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை வரவேற்றும், எதிர்த்தும் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் கேட்டுள்ளார், "என்னாது பொருளாதார சிரமமா???? நாடு முன்னேற்றப்பாதையில் செல்கிறது. பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்றெல்லாம் சொன்னீங்களே அக்கா!! உங்களையும் ஏமாத்திட்டாரா மோடி" என்று பதிவிட்டுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications