புழல் சிறையில் பயங்கரவாதி பிலால் மாலிக்கை பாம்பு கடித்தது.. மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி பிலால் மாலிக்கை பாம்பு கடித்தது. அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பயங்கரவாதிகள் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் பா.ஜ.க. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு, தேசத் தலைவர்களை கொல்ல முயன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளன.

இந்த நிலையில் இன்று காலையில் பிலால் மாலிக் சக கைதிகளுடன் சிறை வளாகத்தில் இருந்தார். அப்போது அங்கு இருந்த சாரைப் பாம்பு ஒன்று பிலால் மாலிக்கை கடித்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சக கைதிகள் ஒன்று சேர்ந்து அந்த சாரைப் பாம்பை அடித்துக் கொன்றனர். இதனை தொடர்ந்து பயங்கரவாதி பிலால் மாலிக்க்கு சிறையில் முதலுதவி சிகிச்சை கொள்ளப்பட்டது.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதோடு, தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படுகிறது. பிலால் மாலிக் பயங்கரவாதி என்பதால் அவர் சிகிச்சை பெறும் பகுதியில் போலீஸ் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் கைதியை பாம்பு கடித்ததால் புழல் சிறையில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications