மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு சூழல்.. சென்னை அமெரிக்க துணை தூதரகம் சார்பில் பயிற்சி பட்டறை
சென்னை: சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் பிரவா ஆதரவு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து, "மாற்றுத்திறனாளிகளுக்கான (Disability-friendly) விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குதல்" என்ற தலைப்பில் மெய்நிகர் பயிற்சி பட்டறை நடத்தியுள்ளது.
டெல்லியை மையமாகக் கொண்ட பிரவா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் தொழில்முறை பரிமாற்ற திட்டங்களின் இந்திய முன்னாள் மாணவர்கள் - சர்வதேச பார்வையாளர் தலைமைத்துவ திட்டம் (International Visitor Leadership Program- IVLP) அடிப்படையில் இந்தப் பட்டறை நடைபெற்றது.
யு.எஸ். பரிமாற்ற முன்னாள் மாணவரும், தி ஸ்பைனல் பவுண்டேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜஸ்டின் ஜேசுதாஸ் மற்றும் வித்யா சாகர் சிறப்பு கல்வி மையம் குழந்தை பிசியோதெரபிஸ்ட் சிமி ஆகியோர்களால் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த விழிப்புணர்வையும் அர்ப்பணிப்பையும் வளர்ப்பதற்காக இந்த பட்டறை வடிவமைக்கப்பட்டிருந்தது.

இப்பட்டறையில், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் துறை ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் இணைந்து, உள்ளடக்கிய விளையாட்டு, சுற்றுச்சூழல் அமைப்புகள் (Inclusive sports ecosystem), செயல் திட்டங்களை மேம்படுத்துவதற்கான யுக்திகளை உருவாக்கினர்.
நிகழ்ச்சியின்போது, சென்னையில் உள்ள யு.எஸ். துணைத் தூதரகத்தின் கலாச்சார விவகார அதிகாரி மாலிக் பெர்கானா கூறுகையில், "உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளுக்கு சமமான பங்கீடு ஆகியவை நமது இரு ஜனநாயக நாடுகளுக்கிடையேயான முக்கியமான அம்சமாகும். மேலும் தற்போதுள்ள கொரோனா சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை( Disability rights) முன்னேற்றுவதற்கான பணியால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்.
ஜஸ்டின் ஜேசுதாஸ் பாராஸ்போர்ட்ஸ் (Parasports)இயக்கத்தின் வரலாறை பகிர்ந்து கொண்டார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற விளையாட்டு சூழலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதின் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில், 30 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோருக்கு பொழுதுபோக்கிற்கோ அல்லது போட்டிக்காகவோ விளையாட்டைத் தொடரலாம் என்பது கூட தெரிவதில்லை. மேலும் மொத்த இந்தியாவுக்காக வாதிடுவதற்கும், மாற்றுத் திறனாளிகளை விளையாட்டு மூலம் மேம்படுத்துவதற்கும் தான் இங்கு வந்துள்ளதாகவும் கூறினார்.
குழந்தை பிசியோதெரபிஸ்ட் சிமி டி.ஏ., பேசுகையில், தகவமைப்பு விளையாட்டுகளுக்கு (Adaptive sports) உதவும் சூழலை உருவாக்க போசியா (Boccia) மற்றும் தகவமைப்பு கிரிக்கெட் (Adaptive cricket) போன்ற விளையாட்டுகளின் தற்கால உதாரணங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் கூறுகையில், "ஒரு உள்ளடக்கிய உலகத்தை உருவாக்க, அனைத்து தரப்பும் சமமாக பங்கேற்பதை உறுதி செய்கிறோம்" என்றார்.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்!












Click it and Unblock the Notifications