இளம் தலைமுறையினரிடம் திருக்குறள் சென்றடைய... ஊடகங்களுடன் இணையும் தமிழ் வளர்ச்சித் துறை!
சென்னை: இளம் தலைமுறையினரிடம் திருக்குறள் சென்றடைய ஊடகங்களுடன் இணைந்து பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொழில்துறையுடன் தமிழ் வளர்ச்சி துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அவர் வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் இந்த தகவலை கூறியுள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

சிறப்புப் பரிசு
அரசின் அனைத்துச் செயற்பாடுகளும் முழுமையாகத் தமிழில் இருக்க வேண்டும் என்பதற்காக (அலுவலகக் கோப்புகளில்) குறிப்புகள், வரைவுகள் தொடர்ந்து தமிழில் எழுதும் அரசுப் பணியாளர்களைத் தெரிவு செய்து மாவட்ட நிலை, உள்ளாட்சி நிலை, தன்னாட்சி நிலை, சார்நிலை ஆகிய வகைப்பாடுகளில் சிறந்து விளங்கும் பணியாளர்கள் தெரிவு செய்யப்பெற்று அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000/-, இரண்டாம் பரிசாக ரூ.2,000/-, மூன்றாம் பரிசாக ரூ.1,000/ எனப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெறுகின்றன.

கேடயம் பரிசு
ஆட்சிமொழிச் சட்டத்தின் அடிப்படையில் அரசு அலுவலகங்களில் அலுவலகச் செயற்பாடுகள் முழுமையாக தமிழில் நடத்திவரும் அலுவலகங்களில் தலைமைச்செயலக அலுவலகம், துறைத் தலைமை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாரியங்கள், கழகங்கள் ஆகியவற்றின் துறைத் தலைமை அலுவலகங்கள் என்ற வகைப்பாட்டின்கீழ் தெரிவுசெய்து ஒவ்வொரு ஆண்டும் கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறுகின்றன.

தாய் மொழி நாள்
ஐக்கிய நாட்டுக் கல்வி மற்றும் கலைப் பண்பாட்டு அவையின் சார்பில் பிப்ரவரித் திங்கள் 21ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாகக் கடைப்பிடிக்க அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் உலகத் தாய்மொழி நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" என முழங்கிய புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் நாளைப் போற்றும் வகையில் தமிழ்க் கவிஞர் நாளாக, தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீராக் காதல் திருக்குறள்
"தீராக் காதல் திருக்குறள்" என்ற பெயரில் ஊடகங்கள் வாயிலாகத் திருக்குறள் இன்றைய தலைமுறையினரைச் சென்றடையும் வகையில் தொலைக்காட்சிகளுடன் இணைந்தும் இணைய வடிவிலும் அசைவூட்டும் படங்கள், வினாடி வினா, குறும்படங்கள், நடனம் போன்ற கலை வடிவங்களோடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications