Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரள என்.சி.சி.யில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை.. இங்கு கம்யூனிஸ்டு பொங்காதது ஏன்? பாஜக பிரமுகர் ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகா மாநிலத்தில் நிலவி வரும் ஹிஜாப் விவகாரம் குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கருத்து கூறியுள்ளார். கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்கு வருவதற்கு எதிராக சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இதனால் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள், குல்லா, ஹிஜாப், பருதா, புர்கா போன்றவை அணிந்து கல்லூரிகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இறுதியில் உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

ஆடை அணிவது என்பது எங்களின் உரிமை

ஆடை அணிவது என்பது எங்களின் உரிமை

இதனை எதிர்த்து மாணவிகள் பல நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். ''ஆடை அணிவது என்பது எங்களின் உரிமை. இதனை யாரும் தடுக்க முடியாது'' என்று அவர்கள் கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர்.

'நாங்கள் காவி துண்டு அணிவோம்'

'நாங்கள் காவி துண்டு அணிவோம்'

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால், ''நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம்'' என்று கூறி சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். சில மாணவிகள் காவி துப்பட்டா அணிந்து வந்தனர். இதனால் கர்நாடகா முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தேசிய மாணவர் படையில் அனுமதி மறுப்பு

தேசிய மாணவர் படையில் அனுமதி மறுப்பு

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கருத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ' தேசிய மாணவர் படையில் உள்ள இஸ்லாமிய பெண் மாணவிகள் 'ஹிஜாப்' அணிவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று குறிப்பிட்டு கடந்த எட்டு நாட்களுக்கு முன் அனுமதி மறுத்துள்ளது கேரள கம்யூனிஸ்ட் அரசு.

Recommended Video

    Vava Suresh Health | கண்விழித்து பேசிய பாம்புபிடி மன்னன் | Oneindia Tamil
    அலறுவது ஏன்?

    அலறுவது ஏன்?

    அதன் உத்தரவில், "சீருடை என்பது' அனைவரும் ஒன்று' என்ற உடுப்பு நெறியை போதிக்கும் கண்ணியத்தை சீரழிக்கும் என்று மறுத்துள்ளது. ஆனால், இதே விவகாரத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் 'ஹிஜாப்' அணியும் விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் 'குய்யோ முறையோ' என்று குரல் கொடுத்து, மத சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கப்படுவதாகவும், மத சுதந்திரத்தை நசுக்குவதாகவும் அலறுவது ஏன்? கேரளாவில் ஆட்சி இருப்பதால், அங்கு மதநல்லிணக்கத்தை பேணுபவர்கள், கர்நாடகாவில் ஆட்சி இல்லாததால் மத கலவரத்தை தூண்ட வெறி கொண்டு, சட்ட ஒழுங்கை சீர் குலைக்க முயல்வது ஏன்?' என்று அவர் கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+