வேற ஒன்னுமில்லை.. 2 நாளா தமிழிசை மனசோர்வுல இருக்காங்க.. அதான் இப்படி பேசுகிறார்.. அழகிரி நக்கல்
தமிழிசை சவுந்தராஜனுக்கு கேஎஸ் அழகிரி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்!
சென்னை: "அது வேற ஒன்னுமில்லை.. 2 நாளா தமிழிசை ரொம்ப மனசோர்வாக இருக்காங்க. அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்ன்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி இப்போ பயத்துடனே இருக்கிறார், அதனால்தான் பாஜகவுடன் திமுக பேசியதாக சொல்கிறார்" என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்!
பாஜகவுடன் திமுக பேசிவருவதாக தமிழிசை சொன்னாலும் சொன்னார், திமுக தரப்பில் மட்டுமல்லாது, அதன் கூட்டணி தரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவித்து விளக்கங்கள் வந்து விழுந்து கொண்டிருக்கிறது.
முக ஸ்டாலின், பொன்முடியை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் தமிழிசைக்கு பதில் சொல்லி உள்ளார். இது சம்பந்தமாக ஒரு அறிக்கையும், அந்த அறிக்கையை தனது ட்வீட்டிலும் பதிவிட்டுள்ளார்.
அதில், "தமிழக பாஜக தலைவர் சகோதரி கடந்த இரண்டு தினங்களாக மிகவும் மனச் சோர்வுடன் காணப்படுகிறார். தமிழகத்தில் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு முழுமையாக அவர்களுக்கு இல்லை என்பது தெரிந்தவுடன் எங்களை மிகவும் கடுமையாக சாடுகிறார்.
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிதான் அமைய வேண்டும்... பிரச்சாரத்தில் வைகோ ஆவேசம்!!
இருந்தாலும் ஒரு சகோதரியின் விமர்சனமாகவே நாங்கள் அதை ஏற்று கொள்கிறோம். திமுக தலைவர் முக ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கூட்டணி பற்றி பேசியதாக கூறியிருக்கிறார். அரண்டவன் கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய் என்பதுபோல, சகோதரி தமிழிசை மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறார்" என்று அந்த அறிக்கை நீள்கிறது.