குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் சண்முகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மதுவுக்கு கடந்த ஜூலை மாதம் திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து குவைத்திலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 29-ஆம் தேதி மரணமடைந்தார். இந்த நிலையில் மறைந்த குவைத் மன்னருக்கு தமிழக அரசு சார்பில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில் அக்டோபர் 4-ஆம் தேதி அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க வேண்டும். அரசு சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications