ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு.. தமிழக அரசு உத்தரவு
சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள், அரசியல் கட்சிகள், பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர்.

இதையடுத்து காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகாரபன் திட்டம் செயல்படுத்தியதால், நிலத்தடி நீர், மண்வளம், நீர்பாசன ஆதராங்கள், பயிர்களின் சாகுபடி, காற்றின் தரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய போகிறது.
மீத்தேன், ஷெல் கேஸ் திட்டத்திற்காக நிலத்தில் பெரிய அளவு துளையிடுவதால், நிலத்தடி நீர் குறைய வாய்ப்புள்ளதா?, நிலத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா? என்பது குறித்தும் நிபுணர் குழு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. மேலும், டெல்டா பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதார பாதிப்பு குறித்தும் ஆய்வு செய்து, 4 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் குழுவிற்கு அரசு வலியுறுத்தி உள்ளது.
இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம் பின்வருமாறு : தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் பகுதிநேர உறுப்பினரான பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் இந்துமதி எம்.நம்பி, மகேஷ்வரி, திருச்சி மண்டல நீர்வள தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, டிட்கோ நிறுவனத்தின் பொது மேலாளர் கார்த்திகேயன் உட்பட 6 பேர், இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications