தொழிற்சாலை வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம்.. பணியாளர்கள் பைக்கில் செல்ல அனுமதியில்லை - தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே 25-ம் தேதி முதல் தொழிற்சாலை பணியாளர்கள் தொழிற்சாலைக்கு இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் நாளை முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

 TN govt has announced that from May 25, factory workers will not be allowed to enter the factory in two-wheelers

அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பால் பூத், மருந்தகம் தவிர காய்கறி, மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் கொண்டு இயங்கலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே கூறி இருந்தது.

இந்த நிலையில் இந்த அத்தியாவசிய தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்து வரும் வாகனங்கள் கட்டாயம் இ-பதிவு செய்ய வேண்டும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 25-ம் தேதி முதல் தொழிற்சாலைகள் இ-பதிவு செய்ய வேண்டும். மே 25-ம் தேதி முதல் தொழிற்சாலை பணியாளர்கள் இரு சக்கர வாகனங்களில் தொழிற்சாலைக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+