Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் பரிசு தொகுப்பு.. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.. முக்கிய அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கிடையே தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு பொருட்கள் முழுவீச்சில் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

டோக்கன் முறையில் விநியோகம்

டோக்கன் முறையில் விநியோகம்

இதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் வழங்கப்படும் தேதி குறிப்பிடபட்டு இருக்கும். அந்த நாளில் சென்று பொருட்கள் வாங்கி கொள்ளலாம். தற்போது கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலேயே டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 ஜனவரி 31-ம் தேதி வரை வாங்கி கொள்ளலாம்

ஜனவரி 31-ம் தேதி வரை வாங்கி கொள்ளலாம்

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ஜனவரி 31-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் மக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் வேறு நாளில் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சில பொருட்களை வழங்குவதில்லை என குற்றச்சாட்டு

சில பொருட்களை வழங்குவதில்லை என குற்றச்சாட்டு

தேதி நீட்டிப்பு செய்யப்பட்டதன் மூலம் கூட்ட நெரிசல் இல்லாமல் பொருட்கள் வாங்கி கொள்ளலாம் என்று அவர் கூறினார். ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும்போது இந்த 21 பொருட்களில் சில பொருட்களை வழங்காமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும். இதில் தவறு செய்பவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+