தைரியம் இருக்கே.. அதனால்தான் பாஜக தனித்து போட்டி.. மந்தைவெளியில் வாக்களித்த குஷ்பு!
சென்னை: தைரியம் இருப்பதால்தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இன்றைய தினம் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. ஆனால் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடுகிறது.

விறுவிறு வாக்குப் பதிவு
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் காலை முதலே விறுவிறுப்பாக மக்கள் வாக்களிக்க வருகை தருகிறார்கள். திரைப் பிரபலங்களும் வந்து செல்கிறார்கள். ஒவ்வொருவரும் மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும். 100 சதவீத வாக்குப் பதிவை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறார்கள்.

மந்தைவெளியில் குஷ்பு
இந்த நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு வந்திருந்தார். அவர் வாக்களித்து விட்டு வெளியே வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் வீட்டிலேயே இருந்துவிடாமல் அனைவரும் வாக்குச் சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க வேண்டும்.

தைரியம் இருப்பதால்தான் தனித்து போட்டி
வெற்றி பெறுவோம் என்ற தைரியம் இருப்பதால்தான் பாஜக தனித்து போட்டியிடுகிறது என குஷ்பு தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவைகளில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

மேயர் பதவி
இந்த நிலையில் இந்த நகர்ப்புற தேர்தலில் மேயர் பதவிகளையும், நிறைய இடங்களையும் பாஜக கேட்டு அதற்கு அதிமுக ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேசிய அளவில் அதிமுகவுடனான பாஜகவின் கூட்டணி தொடரும் என்றே அறிவிக்கப்பட்டது.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி முறிவு
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது என விமர்சனங்கள் எழுந்தன. தற்போது பாஜக தனித்து போட்டியிடுவதால் அக்கட்சிக்கு மக்களிடையே இருக்கும் உண்மையான செல்வாக்கு இந்த தேர்தலில் வெளிப்பட்டுவிடும் என்றே சொல்லப்படுகிறது. கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்தும் ஒரு வாக்கை பெற்றதாக விமர்சிக்கப்பட்ட பாஜக இந்த முறை எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’












Click it and Unblock the Notifications