புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.. நாளை முதல் மீண்டும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கஜா புயல் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து மக்கள் வெளியே வராத நிலையில் மீண்டும் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
இதுகுறித்து சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி அளித்துள்ளார். அதில், தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். ஆனால் புயலாக மாற வாய்ப்பில்லை.

நாளை மீண்டும்
இதனால் நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும். 19-20 தேதிகளில் தமிழகம் முழுக்க மழை பெய்ய வாய்ப்பு. மிதமான மழையாக தொடங்கி கனமழையாக மாறும்.

வட கடலோரம்
இதனால் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். முதலில் வடகடலோர மாவட்டங்கள் அதிகம் பாதிக்கும். வடகடலோர மாவட்டங்களில் இன்று மாலையே கனமழை தொடங்கும்.

சென்னை எப்படி
21ம் தேதி மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்யும். இன்று சென்னையில் மிதமான மழை பெய்யும். நாளை மாலையில் இருந்து இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி அளித்துள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு











Click it and Unblock the Notifications