சென்னை தி நகர் துரைசாமி சுரங்கபாதை உள்பட 3 சுரங்கபாதைகள் மூடல்!
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள துரைசாமி சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சுற்று வட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், வேளச்சேரி, அடையாறு, மந்தைவெளி, வடபழனி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலை உள்ளது. எனினும் வார நாட்களில் விடுமுறை எடுக்கும் நடைமுறை கொண்ட அலுவலக பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு வாங்க
இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் உணவு வாங்கக் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய சாலைகளில் மழை நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஒரு நாள் மழைக்கே இப்படி என்றால் இன்று 3 மணி நேரத்திற்கு சென்னையில் மழை என சொல்லியுள்ளதை எண்ணி மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

தண்ணீர் தேக்கம்
சுரங்கபாதைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு அவை மூடப்பட்டுள்ளன. திநகரில் உள்ள துரைசாமி சுரங்கபாதை, வடசென்னையில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கபாதை, சேத்துப்பட்டு- பூந்தமல்லியை இணைக்கும் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன.

ஊழியர்கள் முயற்சி
இங்கிருந்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். திநகர் சுரங்கபாதையானது மேற்கு மாம்பலத்திலிருந்து திநகர் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் முக்கிய சுரங்கபாதைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து குறைந்துள்ளது. எனினும் பேருந்து போக்குவரத்து, இரு, நான்கு சக்கர வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications