சென்னைக்கு முக்கியம்.. தெற்கு ரயில்வே அளித்தது சூப்பர் பரிந்துரை.. 300 கோடி திட்டம்!
சென்னை: ரூ.300 கோடியில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது புதிய ரயில்பாதையை அமைக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மிக முக்கியமான புறநகர ரயில் பாதை வழிதடம் என்றால் அது தாம்பரம்- கடற்கரை வழித்தடம் தான். இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 3 பாதைகள் மட்டுமே உள்ளது.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே தற்போது 2 தண்டவாளப் பாதைகளில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஒரு பாதையில் விரைவு ரயில் அல்லது சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 4வது பாதை இல்லாத காரணத்தால் கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ இயலாத நிலை உள்ளது.
மிகமிக முக்கியமான வழித்தடமான இதில் தான் சென்ட்ரல் (பூங்கா சந்திப்பு), கோட்டை ஆகிய ரயில் நிலையங்களும் வருகின்றன. அத்துடன் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ரயில்கள் செல்ல இதுதான் பிரதான பாதையாகவும் உள்ளது. எனவே சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது புதிய பாதை அமைக்க வேண்டுமென தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு செய்து புதிய பாதைக்கு மண் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்துவதில் ரயில்வே வாரியம் தயக்கம் காட்டி வந்த நிலையில் பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதர மாநிலங்களின் ரயில்கள் சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் வழியாக செல்ல போதிய ரயில் பாதை இல்லாததால், கூடுதல் ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படுவதால் 4வது பாதை அமைக்க வேண்டியது அவசியம் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினார்கள்.
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில்பாதை திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து பரிந்துரை செய்தால் , நிறைய ரயில்கள் இயக்க முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications