நெருங்கியாச்சு கிளைமேக்ஸ்.. வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. பரபரக்கும் களம்
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே மாநில தேர்தலுக்கு வேட்புமனு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என நான்கு முனை போட்டி உள்ளது. இது போக சசிகலா மற்றும் ராமதாஸ் ஆகியோரின் கட்சிகளும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறார்கள். இதனால் தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவுகிறது.

தமிழ்நாடு தேர்தல்
தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களுக்கும் குறைவாகவே உள்ள சூழலில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுக்க சூறாவளி பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள். இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது என்றே சொல்லலாம்.
வேட்புமனு
இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உட்பட பல்வேறு அமைச்சர்கள் கடந்த வாரமே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். அதேநேரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில தலைவர்கள் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்யக் கால அவகாசம் தொடங்கிய நிலையில், இன்றோடு அது நிறைவடைகிறது. இன்றைய தினம் எடப்பாடி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். குறிப்பாகக் காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் இன்றே வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.
பாஜக வேட்பாளர்கள்
இன்றைய தினம் பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு நிகழ்வில், மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூரில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில், அதில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பங்கேற்கிறார். அதேபோல அநாதி தொகுதியில் எல் முருகன் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் அமைச்சர் கிஷண் ரெட்டி பங்கேற்கிறார்.
இதுபோல மாநிலம் முழுக்க பல்வேறு தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யக் கடைசி நாளாக உள்ள சூழலில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளைய தினம் நடைபெறுகிறது. அதில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு விதிமுறைகளைப் பின்பற்றாத மனுக்கள், முறையாக நிரப்பப்படாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.
தேர்தல் களம்
அதன் பிறகு வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதாக இருந்தால் பெறலாம். அதுபோல வேட்பாளர்களைத் திரும்பப் பெற வரும் 9ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் இந்த முறையும் வழக்கம் போல ஒரே கட்டமாகவே சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 23ம் தேதி மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து 4 மாநில தேர்தல் முடிவுகளோடு, வரும் மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
-
தவெக தலைவர் வயது 51ஆ, 52ஆ? திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த விஜய்.. பலே -
பென்னாகரத்தில் ஒரே சத்தம்.. சூத்திரதாரி திமுக தானே மணி.. ராமதாஸின் பிளானையே ஓவர்டேக் செய்தாச்சா -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சீமானுக்கு இங்கு ஓட்டு இல்லை! காரைக்குடிக்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது - கார்த்தி சிதம்பரம் -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. முன்னாள் எம்பி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு! -
“எனக்கு ஓட்டு போட்டா போடு.. இல்லைனா போ.. தெம்பு இருக்கிறவர நின்னு கத்தி செத்துக்கூட போவேன்” - சீமான் -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு -
"நாடார் - தேவர்" ஜாதிக்கு அதிக வாய்ப்பு.. தொகுதி வாரியாக நெல்லை - தென்காசி வேட்பாளர்களின் பின்னணி -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை












Click it and Unblock the Notifications