ஓடவும் முடியாது..ஒளியவும் முடியாது! கேடிகளுக்கு கடிவாளம் போடும் ‘ட்ராக் கேடி’! தமிழக போலீஸ் அசத்தல்!
சென்னை : தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் ட்ராக் கேடி என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாகவும், கூலிப்படை நடமாட்டம் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து ரவுடிகளை பிடிக்கும் முயற்சிகள் போலீசாரால் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் நெல்லை மட்டுமல்லாது சென்னையில் அட்டகாசத்தை ஆரம்பித்து பல ரவுடிகள் போலீசார் நடத்திய மின்னல் வேட்டையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

தமிழக காவல்துறை
கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு முழுவதும் போலீசார் நடத்திய மின்னல் ரவுடி வேட்டையில் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மின்னல் ரவுடி வேட்டையில் பல ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்த 13 A+ லிஸ்ட்டில் இருந்த ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். இதனால் தமிழகம் முழுவதும் ரவுடிகள் மீண்டும் தலைமறைவாகியுள்ளனர்.

சைலேந்திர பாபு
தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் ட்ராக் கேடி என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம் செய்து வைத்தார். இச்செயலியில் குற்ற சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும், நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்கிறது.

ட்ராக் கேடி
39 மாவட்டங்கள் மற்றும் 9 ஆணையரகங்களில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் குற்ற சரித்திரப் பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்த செயலியை காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல்துறை தலைமையகத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், மதுரை மாநகர முன்னாள் காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் உடனிருந்தனர்.

ரவுடிகளை கண்காணிக்கலாம்
டிராக் கேடி செயலி மூலம் குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிக்கை விபரங்கள், ரவுடிகளின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டுள்ளனர், பிணைப் பத்திரங்களின் காலாவதி தொடர்பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணை, குற்றத்தின் வகைகள் போன்றவற்றின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வகைப்படுத்தி வைக்க முடியும் எனவும், அதன் காரணமாக காவல் அதிகாரிகளால் குற்றவாளிகளின் பல்வேறு விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்க முடியும் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications