கோயம்பேட்டில் நள்ளிரவில் பரபரப்பு... ஆக்டிவாவில் வந்த நபரிடம் மெஷின் கன்.. அதிர்ந்து போன போலீசார்!
சென்னை: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் பகுதியில், நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருநபரிடம் இருந்து இரண்டு மெஷின் கன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த துப்பாக்கியை ஆய்வு செய்ததில் அவை டம்மி துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது. இதை காரைக்குடியில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் "எதற்கும் துணிந்தவன்" என்ற படத்திற்காக கொண்டு செல்வதும் தெரியவந்துள்ளது.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 100 அடி சாலையில் SAF கேம்ஸ் வில்லேஜ் அருகில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

போலீசார் அதிர்ச்சி
அப்போது அந்த வழியாக ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த விக்டர் என்ற நபரை சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த அட்டைப் பெட்டியின் உள்ளே ஒரு பெரிய டிராவல் பேக்கில் INSAS டைப் வகையிலான இரண்டு மிசின்கன்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

போலி துப்பாக்கி
இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு காவல் ஆய்வாள சந்திரசேகர் தலைமையிலான போலீசார், பிடிப்பட்ட விக்டர் (வயது 27) என்பவரிடம் விசாரித்தனர். அவர் சென்னை பெரம்பூர் கஸ்தூரி பாய் காலனி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் வைத்திருந்து டம்மி மிசின்கன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

உதவியாளர்
மேலும் விக்டரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல திரைப்பட இயக்குனர் பாண்டிராஜின் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. டம்மி துப்பாக்கிகளை திரைப்பட படப்பிடிப்புக்காக கொண்டு செல்லப்படவிருந்ததாகவும் விக்டர் கூறியுள்ளார்.

கோயம்பேடு பஸ்
தற்போது காரைக்குடியில் பாண்டிராஜ் இயக்கும் "எதற்கும் துணிந்தவன்" (சூர்யா நடித்து வருகிறார்) என்ற படத்திற்காக இந்த இரண்டு டம்மி மிசின்கன்களை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து பேருந்தில் காரைக்குடிக்கு அனுப்பி வைக்க வந்ததாக விக்டர் போலீசில் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications