சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் வளர்ச்சிக்கு விதை போட்ட நீதிக்கட்சி! எத்தனை பேருக்கு தெரியும்? வைகோ கூறும் பிளாஷ்பேக்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு ஓங்கி வளர்ந்து நிற்பதற்கு அடித்தளம் அமைத்ததே நீதிக்கட்சி அரசு தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நீதிக்கட்சி ஆட்சியில் தான் அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதாகவும் வைகோ பட்டியலிட்டுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள வரலாற்று தகவல்களின் விவரம் வருமாறு;

தெற்கில் 3 பக்கம் கடல்.. ஆனால், தீங்கு வடக்கால் தான்.. வாடை நமக்கு ஆகாது.. வைகோ விளாசல்! தெற்கில் 3 பக்கம் கடல்.. ஆனால், தீங்கு வடக்கால் தான்.. வாடை நமக்கு ஆகாது.. வைகோ விளாசல்!

நீதிக்கட்சி

நீதிக்கட்சி

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் உருவாகி, நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட பேரியக்கம் நவம்பர் 20,1916ல் தோன்றியது. அனைவருக்கும் சம உரிமை, சம நீதி எனும் சமத்துவக் கோட்பாட்டு நிலைப் பெற தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி ஆட்சியில்தான் வகுப்புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

சமூக நீதி வெளிச்சம்

சமூக நீதி வெளிச்சம்

நீதிக்கட்சி அரசால் இந்திய நாட்டிற்கே சமூக நீதி வெளிச்சம் பாய்ச்சியது திராவிட இயக்கம் என்ற பெருமை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டு உள்ளது. நீதிக்கட்சி கொண்டுவந்த சென்னைத் தொடக்கக் கல்விச் சட்டம் - 1920, ஆண், பெண் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியது.

அனைவருக்கும் சமவாய்ப்பு

அனைவருக்கும் சமவாய்ப்பு

பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலையே இருந்து வந்தது. அரசுப் பணிகளில் மட்டும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பார்ப்பனர் அல்லாத மக்களுக்குப் பங்களித்தால் போதாது. அரசுப் பணிகளில் நுழையும் தகுதியை உருவாக்கும் கல்வித் துறையிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க குழுக்களை நியமித்தது.

பார்ப்பனர் அல்லாத சமூகம்

பார்ப்பனர் அல்லாத சமூகம்

ஒவ்வொரு கல்லூரியிலும் குழுக்களை அமைத்து, அதன் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்; கல்லூரித் தலைவர்கள் தங்கள் விருப்பம் போல் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்ற ஆணைக்குப் பின்னர்தான் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரியில் ஓரளவு இடம் கிடைக்கும் நிலை உருவாயிற்று.

இலவசக் கல்வி

இலவசக் கல்வி

பெண்கள் முன்னேற்றத்திற்காகச் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். பெண்கள் கல்விக்காகப் பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கினர். பெண்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு வரை கட்டணமில்லாமல் இலவசக் கல்வி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு ஓட்டு

பெண்களுக்கு ஓட்டு

சென்னை மாகாணப் பெண்கள் 1921 முதல் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர்.இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றது நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்ற சென்னை மாகாணத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.பொதுத்துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

 பணியாளர் தேர்வு வாரியம்

பணியாளர் தேர்வு வாரியம்

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும், கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன. நீதிக்கட்சி ஆட்சியில் தான் அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. தேவதாசி முறை ஒழித்துக்கட்டப்பட்டது. பணியாளர் தேர்வு வாரியம் 1924-இல் ஏற்படுத்தப்பட்டது.

 மேட்டூர் அணை

மேட்டூர் அணை

இதுவே இந்தியாவின் முதல் பொதுப்பணித் தேர்வாணையமாகும். 1924இல், பனகல் அரசர் காலத்தில்தான் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும், இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பயனாக மேட்டூர் அணைகட்டத் திட்டம் உருவாக்கப்பட்டு, இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்று, மேட்டூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு வேளாண்மையில் செழிக்க வழி வகை செய்தது நீதிக்கட்சி அரசு.

English summary
Vaiko says, Justice Party laid the seed for the development of Tamil Nadu Vaiko said that the Justice Party government has laid the foundation for Tamil Nadu to rise and stand as the best state in India today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X