ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடையா.. நாங்க ப்ரீயா தரோம்-.. விசிக, மமக ஆவேசம்
சென்னை: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி தராவிட்டால் விழா வளாகத்தில் இலவசமாக பீப் பிரியாணியை தருவோம் என எஸ்டிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.
திருப்பூத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக ஆம்பூர் பிரியாணி திருவிழா நாளை முதல் 15 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த திருவிழா ஆம்பூர் வர்த்தக மையத்தில் நடக்கிறது.
இதற்காக 30 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 22 வகையான பிரியாணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பிரியாணி பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

பிரியாணி
ஒரே இடத்தில் அத்தனை வகையான பிரியாணிகளை சுவைக்கவுள்ளதால் தற்போதே வார இறுதியை ஆம்பூரில் கொண்டாட கிளம்பிவிட்டார்கள். இந்த நிலையில் இங்கு பீப் பிரியாணிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தமமுகவின் செய்தி பிரிவு செயலாளர் ஆம்பூர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

ஆம்பூர் பிரியாணி
அதில் இறையன்பு அவர்களே... தங்கள் அதிகார வரம்பில் வரும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆம்பூர் பிரியாணி திருவிழா நடத்த முற்பட்டது வரவேற்கத்தக்க விஷயம்... ஆனால் தனிப்பட்ட தனக்கு பீஃப் பிடிக்காது என்ற காரணத்திற்காக அந்த திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி மறுத்து வருகிறார். ஆம்பூரில் 80 சதவீத பிரியாணி கடைகள் பீஃப் பிரியாணி கடைகளே. அதே போல் இங்கு சாதி மதம் தாண்டி 90% பொதுமக்கள் பீப் பிரியர்களாகவே உள்ளனர். தமிழகம் சமூக நீதி பூமி என்பதனை முதல்வர் ஸ்டாலின் நிரூபித்து கொண்டு வரும் சூழலில் பிரியாணி திருவிழாவில் பீப் தடை என்பது சமூக நீதியை கேள்வி கேட்பதாக உள்ளது.

பீப்பிற்கு தனி அரங்கம்
தக்க நடவடிக்கை எடுத்து அனைத்து சமூக மக்களையும் மதிக்கும் வகையில் பீஃபிற்கு தனி அரங்கம் அமைத்து, சைவ பிரியர்களுக்கும் தனி அரங்கம் அமைத்து பிரியாணி திருவிழா அமோகமாக நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே நாட்டில் பீப்பிற்கு எதிராக தடைகள் உள்ள நிலையில் உணவு திருவிழாவில் இப்படி ஒரு தடையா என மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
Recommended Video

இலவச பீப் பிரியாணி
இந்த நிலையில் எஸ்டிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தன. அப்போது கட்சியின் பிரதிநிதிகள் கூறுகையில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி தராவிட்டால் திருவிழா நடைபெறும் வளாகத்தில் இலவசமாக பீப் பிரியாணியை தருவோம் என தெரிவித்துள்ளார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications