எங்கள் தரப்பில் வேட்பாளர் தயார்.. பாஜக நிலைப்பாட்டுக்கு காத்திருக்கிறோம்..ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
ஓபிஎஸ் தரப்பில் போட்டியிட வேட்பாளர் தயாராக இருக்கிறார் என்று புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டுக்காக தாங்கள் காத்திருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் தரப்பிலும் வேட்பாளர் தயாராக இருப்பதாக புகழேந்தி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
அதேபோல் அமமுக, தேமுதிக, நாம் தமிழர் உட்பட ஏராளமான கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளனர். ஆனால் அதிமுக வேட்பாளர் அறிவிக்க தாமதமாகி வந்தது. இதனிடையே நேற்று பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும் என்று நாராயணன் திருப்பதி கூறியிருந்தார். இதனால் அதிமுகவின் வேட்பாளர் அறிவிப்பு எப்போது என்று தெரியாமல் இருந்தது.

இரட்டை இலை யாருக்கு?
இந்த நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்று தெரிவதற்கு முன்பாகவே, தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளது. அதேபோல் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேட்சை சின்னத்தில் நின்று பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தயார்
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவித்தது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டது குறித்து புகழேந்தி கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளர் போட்டியிடுவதற்கு தயாராக உள்ளார்.

பாஜக நிலைப்பாடு?
பாஜக போட்டியிடவில்லை என்றால் நிச்சயம் ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளரை நிறுத்துவார் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பாஜக ஆதரவு ஓபிஎஸ் அணிக்கா அல்லது எடப்பாடி பழனிசாமி அணிக்கா என்பது தெரிய வரும்.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
அவிநாசி தொகுதி: பாஜக சுருக்குவலையில் எடப்பாடி..இப்படி பண்ணிருக்க கூடாது..குமுறும் தனபால் ஆதரவாளர்கள் -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
"ஓபிஎஸ் என்னை கைவிட்டுவிட்டார்!" ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் முக்கிய தகவலை சொன்ன உசிலம்பட்டி ஐயப்பன்? -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications