இபிஎஸ் கைக்கு செல்கிறதா அதிமுக?.. என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்.. "3-ல்" எந்த ரூட்டை தேர்வு செய்வார்?
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டதால் அவர் எந்த மாதிரியான முடிவுகளை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வைத்து ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பொதுக் குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஆவடி காவல் துறைக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இந்த கூட்டத்திற்கு அனுமதி மறுக்க முடியாது என ஆவடி காவல் துறையும் கை விரித்துவிட்டது.

தொண்டர்கள்
எந்தவித சந்தேகமும் இன்றி அதிமுக தொண்டர்களின் பெரும்பாலான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்பது ஓபிஎஸ்ஸே அறிவார். பொதுக் குழு உறுப்பினர்கள் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என ஓபிஎஸ் கடிதம் எழுதி கடைசி அஸ்திரத்தையும் பயன்படுத்திவிட்டார்.

98 சதவீதம்
பொதுக் குழு உறுப்பினர்கள் 2600 க்கும் மேற்பட்டவர்கள், அதாவது 98 சதவீதம் பேர் பொதுக் குழு கூட்டத்தை நடத்தியே தீர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அது மட்டுமல்லாமல் ஒற்றைத் தலைமைக்கான தங்களது ஆதரவையும் அவருக்கே தெரிவித்துள்ளார்கள். இப்படி ஒரு சூழலில் அவருக்கு இருந்த அனைத்து வழிகளும் மூடப்பட்டுவிட்டதால் அவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

இத்தனை வழிகள்
முதல் வழி- ஓபிஎஸ் பொதுக் குழு கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்வார் என்கிறார்கள். இரண்டாவது வழி- பொதுக் குழு கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் செல்வார், ஆனால் அங்கு நடக்கும் தீர்மானங்களில் கையெழுத்திட மறுப்பு தெரிவிப்பார். இல்லாவிட்டால் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் வாசிக்க தொடங்கும் போது ஓபிஎஸ் வெளிநடப்பு செய்ய வாய்ப்பிருக்கிறது.

எந்த வழியில் செல்வார் ஓபிஎஸ்
மூன்றாவது வழி- சசிகலாவை நேரில் போய் சந்தித்து ஆதரவு கோர வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே சசிகலா அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என கட்சியினர் விரும்பினர். ஆனால் அதற்கான சூழல் சரியாக அமையாததால் சசிகலா ஏதேனும் முயற்சிகளை எடுத்தாலும் அதற்கு முட்டுக்கட்டைகள் வந்தன. இதனால் ஓபிஎஸ் எப்படியும் நம்மை தேடி வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாராம்.

என்ன செய்வார் ஓபிஎஸ்
ஒரு வேளை சசிகலாவை ஓபிஎஸ் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தால் அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் கூடாரம் காலியாகி சசிகலா பக்கம் வரும் என்பது ஓபிஎஸ்ஸின் வியூகமாக இருக்கிறது. எத்தனையோ கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு இருப்பது இந்த மூன்று வழிகள் அதில் எதை தேர்வு செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏடாகூட கேள்வி.. சட்டென டென்ஷனான பெரியகருப்பன் -
அதிமுக கதை குளோஸ்.. விஜய் வீட்டு கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி.. பங்கப்படுத்திய பன்னீர்செல்வம் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு












Click it and Unblock the Notifications