இரவில் சற்று நேரம் முடங்கிய வாட்ஸ்அப்... தகவல்களைப் பரிமாற முடியாமல் தவித்துப்போன மக்கள்
உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ் அப் சேவை முடங்கியதால், தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதில் மக்கள் அவதி அடைந்தனர்.
சென்னை: வாட்ஸ் அப்பில்தான் பலரது வாழ்க்கையே நடக்கிறது. சில நிமிடங்கள் முடங்கிய வாட்ஸ் அப்பினால் பல்லாயிரக்கணக்கான பயனாளர்கள் தவித்துப் போயினர்.
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் சேவை நேற்றிரவு திடீரென செயல்படாமல் போனது. வாட்ஸ்அப் இயங்கவில்லை என்று இரவு 9.15 மணியளவில் அந்நிறுவனத்தின் கவனத்திற்கு வந்தது.

அடுத்த 45 நிமிடத்திற்குள் சுமார் 30 ஆயிரம் பயனர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தனர். குறிப்பாக இந்தியாவில் சுமார் ஒரு மணி நேரம் வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் அதனை பயன்படுத்துவோர் தவித்தனர்.
வாட்ஸ்அப்பில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து டிவிட்டரில் வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.பின்னர், சேவையில் சிக்கல் இருப்பதை ஒப்புக்கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம், பிரச்னைகளை சீர் செய்துவிட்டதாகவும், இதுவரை பொறுமை காத்ததற்காக பயனர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ட்விட்டரில் பதிவிட்டது.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு, வாட்ஸ் ஆப் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த நேரத்தில் சாட்டிங் செய்ய முடியாமலும், வீடியோ கால் பேச முடியாமலும் பலரும் தவித்துப் போயினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய வாட்ஸ்அப் செயலி பின்னர் மீண்டும் செயல்படத் தொடங்கியது.












Click it and Unblock the Notifications