Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த வெடி.. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த புகழேந்தி ‘அந்த 2 மாஜிக்கள் யார்?’ முன்னாள் ஐ.ஜிக்கு கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : 2019ஆம் ஆண்டு ஐஜி பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகச் சொன்னாரே, அவர்கள் யார் யார் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் சூழலில், இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய பொன்.மாணிக்கவேல் 2019ஆம் ஆண்டு குற்றம்சாட்டிய 2 அமைச்சர்கள் யார் என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.

பொன்.மாணிக்கவேல்

பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஒன்றில், தீனதயாளன் என்பவரை தப்பிக்க வைப்பதற்காக பொன்.மாணிக்கவேல் தன் மீது பொய் வழக்கு போட்டதாக காதர் பாட்ஷா என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், சிபிஐ பொன்.மாணிக்கவேல் மீது சமீபத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால், சமீபத்தில் ஊடகங்களில் கொந்தளித்துப் பேசியிருந்தார் பொன்.மாணிக்கவேல். இந்நிலையில், பொன் மாணிக்கவேல் அப்போது சொன்ன 2 அமைச்சர்கள் யார் என்று புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பை விடாமல் புரட்டி எடுத்து வரும் புகழேந்தி இந்த விஷயத்தையும் கையில் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகழேந்தி

புகழேந்தி

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வா.புகழேந்தியை சமீபத்தில் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்தார் ஓபிஎஸ். இந்நிலையில் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் புகழேந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 2 முன்னாள் அமைச்சர்கள் யார்? அதில் எடப்பாடி பழனிசாமிக்கு பங்கு இருக்கிறதா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலை கடத்தல்

சிலை கடத்தல்

புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொன்.மாணிக்கவேல் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆனவர் என்பதால், காவல்துறையினர் பலருக்கே அவரைப் பிடிக்காது. சேலத்தில் கள்ளச்சாராயத்தை ஒழித்துக்காட்டியவர் பொன்.மாணிக்கவேல். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் அவர் நியமிக்கப்பட்ட பிறகு தான் நாடு விட்டு நாடு சிலைகள் கடத்தப்பட்ட பல விவகாரங்கள் வெளியே வந்தன. 2019 ஜூலையில் உயர் நீதிமன்றத்தில் அவரை மாற்றச் சொன்னது தமிழக அரசு, அப்போது உள்துறையை கையில் வைத்திருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பொறுப்பு

எடப்பாடி பொறுப்பு

அப்போதே ஐஜி பொன்.மாணிக்கவேலின் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து, இரண்டு அமைச்சர்களுக்கு சிலை கடத்தலில் தொடர்பு இருக்கிறது எனத் தெரிவித்தார். அப்போது உள்துறைக்குப் பொறுப்பானவர் எடப்பாடி பழனிசாமி. அதனால் தான் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி அந்த 2 அமைச்சர்களை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தார்.

தப்பிக்க வைக்க

தப்பிக்க வைக்க

இப்போது பொன்.மாணிக்கவேல் நடந்த கதைகளை எல்லாம் சொல்கிறார். கடவுள் சிலைகளை கடத்த முற்பட்டவர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தந்ததாக பொன்.மாணிக்கவேல் சொல்கிறார். ஆனால், அவரை மாற்ற முயற்சித்தது அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக, விசாரணை அதிகாரியை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி.

2 அமைச்சர்கள் யார்

2 அமைச்சர்கள் யார்

இப்போது நான் கேட்பதெல்லாம் அந்த 2 அமைச்சர்கள் யார்? தயவுசெய்து பொன்.மாணிக்கவேல் இப்போது அதை வெளிப்படையாகச் சொல்லவேண்டும். இதில் அரசியல் இல்லை. மக்கள் இதை அறிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குத்தான் அந்த ரகசியம் தெரியும். அந்த 2 அமைச்சர்களில் எடப்பாடி பழனிசாமியும் இருந்தாரா என்ற சந்தேகப்படுகிறேன். அதை பொன்.மாணிக்கவேல் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

எடப்பாடிக்கு தொடர்பா?

எடப்பாடிக்கு தொடர்பா?

இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தளவுக்கு தொடர்பு உள்ளது? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கோடநாடு கொள்ளை, கொள்ளை வழக்கு ஆகியவற்றில் எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்டிருப்பது போல, இதிலும் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? அந்த 2 அமைச்சர்கள் யார் யார்? என பொன்.மாணிக்கவேல் விளக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+