டெல்லிக்கு கிளம்பும் அண்ணாமலை.. இங்கே பார்த்தால்.. திணறும் எடப்பாடி.. என்னாச்சு அதிமுகவிற்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக இன்னமும் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது.

ஒரு பக்கம் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வருகின்றன. மொத்தமாக 10 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக. திட்டமிட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் பாமகவுடனும் அதிமுக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. ஆனால் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை.

2024 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக ஆலோசனை செய்து வருகிறதாம். அதிமுகவிடம் கூட்டணி தொடர்பாக நாங்கள் பேசவில்லை என்று தேமுதிக வெளிப்படையாக மறுத்தாலும், திரைமறைவாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறதாம் .

Why AIADMK is struggling to create alliance with parties in Tamil Nadu

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தலைவர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லம் தேடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணிநேரம் வரை இந்த சந்திப்பு நடந்தது. ஆனால் இதில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரேமலதாவும் அதிமுக கூட்டணியில் இணைய சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுபற்றிய விபரம் எதுவும் வெளியாகவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக-அதிமுக தலைவர்கள் இடையேயான சந்திப்பு என்பது மொத்தம் அரை மணிநேரம் வரை நடந்துள்ளது.

பாமக கூட்டணி: அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பாமக நினைக்கிறதாம். லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு சேலம் தொகுதியை கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது.

மொத்தமாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு "மீண்டும்" ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு டுக்க வேண்டும் என்று பாமக சார்பாக அதிமுகவிடம் அன்புமணி கோரிக்கை வைத்து உள்ளாராம்..

அதிமுக ரியாக்சன்: ராஜ்ய சபா பதவிக்கு அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ராஜ்ய சபா மட்டுமல்ல.. சேலம் தொகுதியில் எடப்பாடி ஆள்தான் நிற்பார். அங்கே கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. எனவே வேறு தொகுதி கேளுங்கள் என்று அதிமுக கறார் காட்டுகிறதாம்.

திணறல்: இதனால் அதிமுக இன்னும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திணறுகிறது. இங்கே ஒரு பக்கம் தமிழ்நாடு பாஜக வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.

பாஜக கூட்டணி வந்தவரை போதும் என்று வேட்பாளரை அறிவிக்கும் முடிவில் இறங்கிவிட்டது. ஆனால் அதிமுக இன்னமும் கூட்டணி பற்றி முடிவு எடுக்காமல் திணறுகிறது.

அதிமுக கூட்டணி: கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

அதிமுக ஆலோசனை: இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகளை அதிமுக தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது. லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக நேற்று முதல்நாள் ஆலோசனை செய்யப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்தது.

கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்தனர். அதாவது யாருடன் கூட்டணி வைக்கலாம்.. யாருடன் கூட்டணி வைக்க கூடாது.. எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

யாரும் பங்கேற்கவில்லை: ஆனால் லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை.

முக்கியமாக பாமக, தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக அதிமுக்கிவிடம் செல்லவில்லை.

இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வந்தன. ஆனால் இது எதுவும் பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணி: பாஜகவுடன் கூட்டணி சேராத பட்சத்தில் 2024 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக ஆலோசனை செய்து வருகிறதாம். அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மொத்தமாக 10 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக. திட்டமிட்டுள்ளதாம்.

திரைமறைவு பேச்சுவார்த்தையில் கிட்டதட்ட கூட்டணி உறுதியாகிவிட்டது என்கிறார்கள். அதே சமயம் ஒரே ஒரு ராஜ்ய சபா தொகுதியை கேட்க தேமுதிக முடிவு செய்துள்ளதாம். பொதுவாக தேமுதிக அதிக இடங்களை கேட்பது வழக்கம். ஆனால் இந்த முறை.. இடங்களை குறைவாக கேட்டு.,. ஒரு ராஜ்ய சபா சீட் கண்டிப்பாக வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறதாம். ஆனால் அதிமுக இன்னும் இதை ஏற்காத நிலையில் கூட்டணி இறுதி ஆவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+