மாட்டிறைச்சி பிரியாணி- எஸ்சி ஆணையத்தின் அதிரடி உத்தரவுக்கு காரணமான ஆம்பூர் பிரியாணி திருவிழா
சென்னை: அரசு நடத்தும் பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சியை தவிர்க்கக் கூடாது என மாநில ஆதிதிராவிடர், பழங்குடி ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆம்பூர் பிரியாணி விழாவில் மாட்டிறைச்சி தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக ஆதி திராவிடர் பழங்குடி ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் கடந்த மே 13,14,15 ஆகிய மூன்று நாட்களில் ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022 நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் மற்றும் 30 - க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆம்பூர் பிரியாணி திருவிழா
அதேநேரத்தில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி தவிர அனைத்து பிரியாணி வகைகளும் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா கூறியிருந்தார். இதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை. இதுதான் மிகப் பெரும் சர்ச்சையானது. ஆம்பூர் சுற்று வட்டாரங்களில் அதிக எண்ணிக்கையில் பீப் பிரியாணி கடைகள் இருக்கும் நிலையில் அதை தவிர்ப்பது ஏன்? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. பிரியாணியிலும் சமூக ஒதுக்கலை கடைபிடிப்பதா? என பல்வேறு தரப்பினர் கண்டனமும் தெரிவித்தனர்.

சர்ச்சையால் ரத்து
மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் உணவுத் தீண்டாமை இது; பீப் பிரியாணி இல்லாமல் திருவிழா நடந்தால் மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவுக்கு எதிரிலேயே பீப் பிரியாணி கடைகளை நடத்துவோம் எனவும் தலித் அமைப்புகள் அறிவித்தன. இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து மழையை காரணம் காட்டி பிரியாணி திருவிழா ரத்து செய்யப்பட்டது.

உணவு தீண்டாமை
அத்துடன் இந்த பிரச்சனை ஓயவில்லை. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்துக்கும் இது தொடர்பாக புகார் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ஆம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் முக்கிய உணவு மாட்டிறைச்சி. ஆனால் அரசு விழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுப்பது உணவுத் தீண்டாமை. இது உளவியல் ரீதியான வன்முறைத் தாக்குதல். ஆகையால் அரசு பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சியை அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.

பீப் பிரியாணியை தவிர்க்க கூடாது
இதனடிப்படையில்தான் தற்போது, அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது; அப்படித் தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும். இனிவரும் காலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டுக்கு வழிவகுக்கக் கூடாது என ஆதி திராவிடர், பழங்குடிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications