சந்தீப் ராய் மாற்றம் ஏன்? கோட்டைக்குப் பறந்த ரிப்போர்ட்? தூக்கி அடித்த முதல்வர்? புதிய அப்டேட்
சென்னை: காவல்துறை ஆணையர் பதவியிலிருந்து சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பு அருண் ஐபிஎஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி நீக்கம் ஏன் நடந்துள்ளது? அதன் பின்னால் உள்ள காரணங்கள் என்ன?
சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரை மாற்றிவிட்டு அந்தப் பதவிக்கு ஏடிஜிபியாக இருந்துவந்த அருணை தமிழக அரசு நியமித்துள்ளது. அதற்குக் காரணம், அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்யவே இல்லை என்பதே எனக் கூறப்படுகிறது. அக்கருத்து சரியாதுதானா என்பது குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரி சித்தண்ணன் சில விளக்கங்களை முன்வைத்துள்ளார்.

"சம்பவம் நடக்கும் அனைத்து இடங்களுக்குக் காவல் ஆணையர் நேரில் போய் தான் ஆகவேண்டும் என்பது இல்லை. அவருக்கு அடுத்த படிநிலையில் உள்ள அதிகாரிகள் அனைவரும் கொலை நடந்த இடத்திற்குச் சென்று அங்கேயே ஆய்வு செய்து அறிக்கையைத் தலைமைக்கு அனுப்பி உள்ளனர். ஆகவே, ரத்தோர் போகாதது ஒரு குறையல்ல. அதே நேரத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஆம்ஸ்ட்ராங் கொலையைக் கண்டித்துள்ளனர். அங்கே களத்திற்குச் சென்றுள்ளனர்.
அறிக்கைகள் விட்டுக் கண்டித்துள்ளனர். அந்தத் துயரத்திற்கு ஒரு மருந்திடும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கலாம். இதன் மூலம் முதல்வர் சட்டம் ஒழுங்கு என்பது தனது முழுக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதனால் எந்த அதிகாரியையும் மாற்றி வேறு ஒருவரை நியமிக்கலாம் என்பதை அவர் இதன் மூலம் உணர்த்தி இருக்கிறார். இந்தப் பதவி மாற்றம் அவரைத் தண்டிப்பதற்காகச் செய்யப்பட்டுள்ளது என்பது சரியான கருத்து அல்ல" என்று கூறியுள்ளார்.
இது குறித்து பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் ஆம்ஸ்ட்ராங் போன்றவர் வெட்டிப் படுகொலை செய்யப்படும் போது அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் காவல்துறை ஆணையர்தான். அதுவும் நகரத்தின் முக்கிய பகுதிக்குள் நுழைந்து ஒருவரைப் படுகொலை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டால், அது பொதுமக்கள் மத்தியில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தும். அதுவே ஒரு சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். எப்படி இதற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவம் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை என்பதைக் காட்டியதோ அதேபோலவே ஆம்ஸ்ட்ராங் கொலையும் எடுத்துக் காட்டியுள்ளது.
இந்தக் குறிப்பிட்ட சம்பவம் நடு ராத்திரியில் நடக்கவில்லை. மாலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் நடந்துள்ளது. அப்படிப் பார்த்தால் திட்டமிட்டு படுகொலை செய்வதற்காக வந்துள்ளனர். ஏதோ தற்செயலாக நடந்த தகராறு கிடையாது. திட்டமிட்டு உள்ளே புகுந்து வெட்டி வீசி உள்ளனர். இந்தளவுக்கு ஒரு தைரியம் எப்படி அந்த ரவுடிகளுக்கு வந்தது? நாம் கொலை செய்தால், காவல்துறை ஒன்றும் செய்து விடாது என்ற துணிச்சல் எப்படி வருகிறது இவர்களுக்கு?
அந்தளவுக்கு ரவுடிகள் மத்தியில் பணம் புழங்க ஆரம்பித்துள்ளது. அவர்கள் சட்டவிரோதமாகக் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம்தான் பணம் ஈட்டுகிறார்கள். அப்படி ஈட்டுகிறார்கள் என்றால், காவல்துறை தன் கடமையை தவறியுள்ளது. நடமாட்டம் அதிகரிப்பதால் வியாபாரம் பெருகுகிறது. அதன்மூலம் அடி, தடி அதிகரித்து ரவுடிசம் பெருகி உள்ளது. அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையினருக்குத்தான் உள்ளது. அவர்கள் அதைச் சரியாகக் கண்காணிக்கவில்லை என்பதால்தான் இப்படி ரவுடியிசம் பெருகி வருகிறது.
குறிப்பாக வடசென்னை எல்லாம் எப்போதும் கவனிப்பில் இருக்கவேண்டிய பகுதி. அதில் சென்னை காவல் ஆணையர் தனது பொறுப்பிலிருந்து தவறிவிட்டார் என்றே கருதுகிறேன். ஆகவே, தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை தேவையான ஒரு நடவடிக்கைதான்.
காவல்துறை உயர் அதிகாரிகள் கீழே உள்ள காவலர்கள் பலி ஆடுகளாக ஆக்கிவிட்டு, இவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். இப்படி ஒரு பெரிய சம்பவம் நடக்கும்போது அதன் தலைமையில் உள்ள அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டும். அவரே தனது ராஜினாமாவை அளித்திருக்கவேண்டும். அல்லது பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கும்படி கடிதம் அளித்திருக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் முற்றிலும் தனது கடமையை நிறைவேற்றத் தவறி இருக்கிறார். அதே போல் கள்ளச்சாராய மரணங்களுக்கு கூட டிஜிபியின் தோல்விதான் காரணம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications