நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியா?.. பொன்.ராதாகிருஷ்ணன் பதில் இதுதான்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணியுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
Recommended Video
சுமார் 7 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி , கட்சியின் மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

பாஜக ஆலோசனை கூட்டம்
இந்த கூட்டத்துக்கு பிறகு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பாஜகவில் சென்னை உட்பட 4 மாநகராட்சிகளுக்கான விருப்பமனு நேர்காணல் நிறைவுற்று விட்டது என்று கூறிய அவர் அனைத்து மாவட்டத்திலும் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவித்தார்.

அண்ணாமலைக்கு முழு அதிகாரம்
பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் வேட்பாளர்களை அறிவிப்பார் என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன் 31-ம் தேதிக்குபின் வேட்புமனு தாக்கல் தொடங்கும். அனைத்து மாவட்ட தலைமை அலுவலகத்திலும் காணொலி மூலம் அண்ணாமலை கருத்துகள் வழங்கியுள்ளார் என்றார்.
கூட்டணி தொடர்பாக மாவட்ட தலைவர்களுடன் முழுமையாக பேசியதாகவும், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க முழு அதிகாரம் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை
பாஜக தனித்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக தனித்து போட்டியிடுவதற்கு இப்போதைக்கு அவசியம் இல்லை என்று கூறினார். அதிமுக கூட்டணியுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக கூறிய அவர் கூட்டத்தில் பேசப்பட்ட எல்லா விஷயத்தையும் இங்கு பேச தயாராக இல்லை எனவும் கூறினர். தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்தால் கொடுக்கும் முதல் வரவேற்பு நாங்களாகத்தான் இருக்கும் என்றும் கூறினார்.

பள்ளி மாணவி தற்கொலை
வினோஜ் செல்வம் மீதான வழக்கு கேவலமான பழிவாங்கும் படலம் என்று கூறிய அவர் இந்த சம்பவம் தமிழகத்திற்கே தலைகுனிவு. ட்விட் செய்ய கூட தமிழகத்தில் அதிகாரம் இல்லை என்று கூறினார். தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை குறித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் மாணவி பேசியதாக பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நாங்கள் பார்த்த மாணவியின் வீடியோவில் கூறிய வாக்குறுதியை பார்த்ததன் அடிப்படையிலேயே நங்கள் செயல்பட்டு வருகிறோம். இது முதன்முறை அல்ல. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன என்று தெரிவித்தார்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications