ஒரே சர்ப்ரைஸ்.. சென்னையில் திடீரென பெய்த மழை... சட்டென்று மாறிய வானிலை
சென்னையில் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது.
சென்னை: சென்னை நகரின் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பெய்துவரும் சாரல் மழையால் குளுமையான காற்று வீசி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் முழுவதும் பருவமழை கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. டிசம்பர் மாதம் மழை ஓய்வெடுக்கவே குடியிருப்பகளை சூழ்ந்த வெள்ளநீர் படிப்படியாக வடியத் தொடங்கியது.

சில வார ஓய்வுக்குப் பிறகு சென்னையில் இன்று மீண்டும் மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் அறிவித்தது போலவே இன்று காலை முதலே சென்னையில் மேக மூட்டம் காணப்பட்டது. தி.நகர், தேனாம்பேட்டை, மெரீனா கடற்கரை பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. சில வாரங்களாகவே பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் திடீர் சாரல் மழையால் சென்னையில் குளுமையான காற்று வீசி வருகிறது.

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications