கும்மிருட்டு.. பாழடைந்த கிணற்றில் அலறல் சத்தம்! பெண்ணை விரைந்து மீட்ட சென்னை தீயணைப்பு வீரர்கள்
சென்னை: மூலக்கடை பேருந்து நிலையம் அருகே பாழடைந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த பெண்ணை தீயணைப்பு படை வீரர்கள் உயிரோடு பத்திரமாக மீட்டனர். பொதுமக்கள் உடனுக்குடன் தீயணைப்புத்துறை, காவல்துறையை அழைத்ததால் கிணற்றில் விழுந்த பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.
சென்னை அருகே மீஞ்சூர் நெய்தவாயல் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. 38 வயதான இவர் பெரம்பூரில் உள்ள தனியார் ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
தையல் தொழிலாளியான விஜயலட்சுமி வழக்கம் போல் நேற்று வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக மூலக்கடை பகுதிக்கு வருகை தந்தார்.
அங்கிருந்து மீஞ்சூர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த விஜயலட்சுமி, உடல் உபாதைக்காக அருகே இருந்த இருட்டான பகுதிக்கு சென்று இருக்கிறார்.

கிணற்றில் விழுந்த பெண்
ஆள் நடமாட்டம் குறைவான அந்த பகுதியில் கிணறு ஒன்று பாழடைந்த நிலையில் இருந்து இருக்கிறது. இருட்டில் சென்ற விஜயலட்சுமிக்கு கிணறு இருப்பது தெரியாமல் அதில் தவறி விழுந்தார். தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் விழுந்த விஜயலட்சுமி தன்னை காப்பாற்றுமாறு அலறி சத்தம்போட்டு உள்ளார்.

பொதுமக்கள் உதவி
விஜயலட்சுமியின் அலறல் சத்தம் அங்கிருந்த மக்களுக்கு கேட்டு இருக்கிறது. பாழடைந்த கிணற்றுக்குள் பெண் ஒருவர் தவறி விழுந்ததை கண்ட பொதுமக்கள் உடனே மாதவரம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு செல்போனில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து உள்ளனர்.

மீட்ட தீயணைப்பு துறை
உடனே மாதவரம் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் போலீசாரும், மாதவரம் தீயணைப்பு துறை அதிகாரி அரவிந்தன் தலைமையிலான வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தவறி விழுந்த விஜயலட்சுமியை மீட்க தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு மூலம் விஜயலட்சுமியை லாவகமாக மேலே தூக்கி மேலே கொண்டு வந்தனர்.

கால் முறிவு
இதனால் விஜயலட்சுமியும் பொதுமக்களும் ஆறுதல் அடைந்தனர். தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த காரணத்தால் விஜயலட்சுமிக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது. அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications