அடேங்கப்பா.. வருமானத்திற்கு அதிகமாக 3,928% சொத்துக்களா? எஸ்.பி.வேலுமணியிடம் துருவி துருவி விசாரணை..!

Subscribe to Oneindia Tamil

கோவை : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அதாவது 3928 % சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எஸ்.பி.வேலுமணியிடம் சொத்து சேர்த்தது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புள்ள நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய வழக்குகள்

புதிய வழக்குகள்

புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணி,அவரது சகோதரர் அன்பரசன்,உறவினர் சந்திரசேகர் உள்ளிட்ட 13 பேருக்கு சொந்தமான 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த முறை அவர்மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடன் சேர்த்து மேலும் 13 பேர் மீதும் இதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

3928 சதவீதம்

3928 சதவீதம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அதாவது 3928 % சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எஸ்.பி.வேலுமணியிடம் சொத்து சேர்த்தது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு

சொத்து குவிப்பு

அதாவது தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் படி 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி முதல் 2021 மார்ச் மாதம் 15ஆம் தேதி வரையிலான காலகட்டங்களில் மட்டும் எஸ்.பி.வேலுமணி அவரது வருமானத்தை விட 58 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 52 ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவரது வருமானத்தை விட 3928 சதவீதம் அதிகமாகும்.

வெளிநாடுகளில் சொத்துகள்

மேலும் எஸ்பி வேலுமணியின் வீட்டில் வைத்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.ப் குறிப்பாக சொத்துக்குவிப்பு வழக்கில் பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் எஸ்.பி.வேலுமணி சொத்துக்களை வாங்கி உள்ளாரா என்றும் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது மகன் மனைவி உள்ளிட்டோர் பெயரிலும் வெளிநாடுகளில் பணம் மற்றும் சொத்துக்கள் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+