கோவை மாணவி தற்கொலை வழக்கு.. பெங்களூருவில் பதுங்கியிருந்த பள்ளி முதல்வர் மீரா கைது
கோவை: கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை, தற்கொலைக்கு மாணவியை தூண்டிய விவகாரத்தில் ஏற்கெனவே இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி நேற்று கைது செய்யப்பட்டார்.
கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் இந்த பள்ளியில் தனக்கு படிக்க விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார்.

பெற்றோரிடம் மாணவி
இதையடுத்து வேறு பள்ளியில் அவரை சேர்த்துவிடுமாறு பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் அந்த சிறுமியை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்துள்ளனர்.

மன உளைச்சல்
இந்த நிலையில் மாணவி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்குக்குள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது அழுது கொண்டிருந்ததும் தெரிகிறது. இதுகுறித்து அவரது தாய் கேட்டதற்கு ஒன்றும் இல்லை என கூறி சமாளித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மிதுன் சக்கரவர்த்தி
அந்த மாணவிக்கு சின்மயா பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இவரது தொல்லை தாளாமல்தான் அந்த மாணவி வேறு பள்ளிக்கு டிசி வாங்கிக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வேறு பள்ளிக்குச் சென்ற பின்னரும் அந்த மாணவியை விடாமல் மிதுன் தொல்லை செய்து வந்தது தெரியவந்தது.

இயற்பியல் ஆசிரியர் மிதுன்
இதையடுத்து இயற்பியல் ஆசிரியர் மிதுனையும் அவர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் பேருந்தில் யாராவது இடித்துவிட்டது போல் இதை கடந்த போ என கூறியதாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனையும் கைது செய்யுமாறு சக மாணவிகள், அவர்களது பெற்றோர், இறந்த மாணவியின் பெற்றோர், உறவினர், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மிதுன் சக்கரவர்த்தி கைது
இந்த நிலையில் நேற்றைய தினம் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அது போல் பாலியல் குற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டம் பாயந்தது.

பள்ளி முதல்வர் மீரா
இதையடுத்து தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா சக்கரவர்த்தியை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது. இதனிடையே பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்த போது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யும் வரை மாணவியின் உடலை மாட்டோம் என மறுத்து பெற்றோரும், உறவினர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பள்ளி முதல்வர் மீரா கைது
இந்த நிலையில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தும் நடவடிக்கைகளில தனிப்படை போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications