உன்ன ஹீரோயின் ஆக்குறேன்.. மீண்டும் ‘பொள்ளாச்சி சம்பவம்’! ஆசை காட்டிய தயாரிப்பாளர்! அதிர்ந்த கோவை!
கோவை : கோவையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை படம் எடுப்பதாகவும், அதில் நடிக்க வைப்பதாகக் கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னயை சேர்ந்த மாணவி ஒருவர் சினிமா துறையில் இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக முயன்று வந்துளார். கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை நவகரையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் 'டிஎன் 41' என்ற முகநூல் பக்கத்தில் மூலம் பக்கத்தின் என்பவர் வெளியிட்ட நேர்காணல் விளம்பரத்தை பார்த்து 19.12.2019 தேதி பொள்ளாச்சி ராமகிருஷ்ணன் மேன்சன் என்ற தங்கும் விடுதிக்கு சென்று பார்த்திபனுடன் அறிமுகம் ஆகி உள்ளார்.

பொள்ளாச்சி சம்பவம்
அப்போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு முக்கிய கதாபாத்திரமாக நடிப்பதற்கு மாணவி தேர்வு செய்ததாகவும், பின்னர் மூன்று நாட்கள் மாணவியிடம் பேசி வந்தவர். பின்னர் 22.12.2019ஆம் தேதி மாணவிக்கு பார்த்திபன் மயக்க மருந்து கொடுத்து உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். மயக்கம் தெளிந்த பின்பு மாணவி தனக்கு நேர்ந்த கொடுரம் குறித்து கேட்டு பிரச்சனை செய்துள்ளார்.

மாணவியிடம் அத்துமீறல்
இதனையடுத்து பார்த்திபன் 18 வயது முடிந்தவுடன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். பின்னர் 20.11.2020 இணையதள வாயிலாக பதிவு திருமணம் செய்து கொண்டு கோவைப்புதூர் அறிவொளி நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் 15 மாதங்கள் பார்த்திபன் ஆசை வார்த்தைகளை கூறி அந்த மாணவியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே பார்த்திபன், அந்த பெண்ணிடம் பழகுவதை நிறுத்தி, வேறுபெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

அதிரடி கைது
இந்நிலையில் தன்னை ஏமாற்றிய பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலை மறைவான பார்த்திபனை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தனிப்படை போலீசார் தேடி தேடிவந்தனர். இந்நிலையில் கோவையில் பார்த்திபன் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து விரைந்து சென்ற அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கோவையில் வைத்து பார்த்திப்பினை கைது செய்தனர்.

பெரும் அதிர்ச்சி
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பார்த்தீபன் ஏற்கனவே இதுபோன்று, கோவை, கேரளா பகுதியை சேர்ந்த சில பெண்களை, ஏமாற்றியது தெரியவந்தது. இந்நிலையில் போக்சோ வழக்கு பலாத்கார வழக்காக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி ஜே.எம்1 கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications