கோவை மக்களுக்கு குஷியான செய்தி.. குறைகிறது கொரோனா.. 4 மாதங்களுக்கு பிறகு ஒரு பலியும் இல்லை
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கோவை மாவட்டம் தொற்றிலும், உயிர் பலியிலும் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தது.
கோவை மட்டுமில்லாமல் அதன் அண்டை மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்கள், தனி பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிலை உருவானது. அவற்றுக்கு ஊரடங்கு தளர்வில் குறைவான தளர்வுகள் வழங்கியது அரசு.

அரசு நடவடிக்கை
இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கைகள் படிப்படியாக குறைய தொடங்கியது.

4 மாதங்களுக்கு பிறகு பலியில்லை
நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிர் பலி இல்லை என்பது தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த மார்ச் 4ம் தேதி யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தொடர்ந்து மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்தது. 4 மாதங்களுக்கு பின் நேற்று உயிரிழப்பு ஏற்படாததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோவை நிலவரம்
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 290 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 334 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 392 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

குணமடைந்த மக்கள்
கோவை மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்து 322 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி கோவை மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,107 ஆக உள்ளது. அந்த மாவட்டத்தில், கொரோனா தொற்று காரணமாக 3,905 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications