எந்தாதண்டி பாம்பு.. அசால்ட்டாக கொத்தியே விரட்டிய கோழி.. பரபரத்து பார்த்த பொள்ளாச்சி
கோவை: பாம்பு என்றாலே படையும் நடுங்கும். சின்ன நாகம் வந்தால் கூட அதை கொல்ல விரட்டுவார்கள் பலர். ஆனால் நாட்டுக்கோழி ஒன்று அச்சப்படாமல் மலைப்பாம்பு ஒன்றை எதிர்த்து நின்று அதை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி அதிகம் பேரால் பகிரப்படும்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில வீடியோக்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப் ஸ்லிப் பகுதியில் உள்ள எருமபாறை மலைவாழ் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட காடர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் காட்டு யானை சிறுத்தை ஆகிய வனவிலங்கு அடிக்கடிவந்து செல்லும்.
இந்நிலையில் எருமைபாறை வன கிராமத்திற்குள் கொடிய விஷம் கொண்ட பெரிய பாம்பு ஒன்று மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது. அதை பலரும் பார்த்துக்கொண்டிருந்தனர். மெதுவாக ஊர்ந்து வந்த பாம்பு குடியிருப்பு பக்கம் வந்தது. மலைவாழ் மக்களால் வளர்க்கப்படும் கோழி அந்த பாம்பை தைரியமாக எதிர்த்து நின்றது.
பாம்புக்கு படை வேண்டுமானால் நடுங்கலாம்.. மலைவாழ் மக்கள் வளர்த்த நாட்டுக்கோழி எதிர்த்து நிற்கும் என்று சொல்லாமல் சொல்லியுள்ளது அந்த வளர்ப்புக்கோழி. தைரியம் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வந்து விடாது தனது குஞ்சுகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால் பாம்புகளை தைரியமாக கோழிகள் எதிர்த்து விரட்டும். இந்த வீடியோவில் தன்னை வளர்த்தவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று காவல் காக்கிறது இந்த கோழி.
குடியிருப்பு பகுதிக்குள் பாம்பை வர விடாமல் தடுத்து காவல் காத்து நின்றது. அதைப்பார்த்த பாம்பு நமக்கு எதற்கு வம்பு பேசாமல் போய் விடுவோம் என்று நினைத்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதைக் கண்ட அப்பகுதி மலைவாழ் மக்கள் ஆச்சரியத்திற்கு உள்ளாகினர். இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications